Tuesday, June 8, 2021

அவள் வந்துவிட்டாள்

வண்ண தூரிகையால் 
யார் வரைய துவங்கிய ஓவியமோ 
வானில் "வானவில்" 

அந்தி வானம் 
அவள் வருகையை 
எதிர்நோக்கி 
காத்திருக்க துவங்கின

அவள் வந்தால் 
மலர்களை கேட்பாளோ ?
இல்லை 
மண்ணின் வாசனை நுகர்வாளோ ?
இல்லை 
கடற்கரை காண 
அலைபாய்வாளோ ?

இதோ 
சில்லென்ற காற்று
அவளை அழைத்து வருகிறது 

முதல் துளி எங்கு விழுமோ 
வானம் நோக்கி என் பார்வை 
அவள் வந்துவிட்டாள்