வண்ண தூரிகையால்
யார் வரைய துவங்கிய ஓவியமோ
வானில் "வானவில்"
யார் வரைய துவங்கிய ஓவியமோ
வானில் "வானவில்"
அந்தி வானம்
அவள் வருகையை
எதிர்நோக்கி
காத்திருக்க துவங்கின
அவள் வந்தால்
மலர்களை கேட்பாளோ ?
இல்லை
மண்ணின் வாசனை நுகர்வாளோ ?
இல்லை
கடற்கரை காண
அலைபாய்வாளோ ?
மலர்களை கேட்பாளோ ?
இல்லை
மண்ணின் வாசனை நுகர்வாளோ ?
இல்லை
கடற்கரை காண
அலைபாய்வாளோ ?
இதோ
சில்லென்ற காற்று
அவளை அழைத்து வருகிறது
முதல் துளி எங்கு விழுமோ
வானம் நோக்கி என் பார்வை
அவள் வந்துவிட்டாள்