இந்த கடல்தாண்டி நீ இருந்த பொழுதில்
என் இதயத்தில் இடம் பிடித்தவள் நீ
பார்த்துக்கொண்டதில்லை நாம்
இணையம் வழி இணைந்த உறவு
இது
தனிமையே துணை என இருந்தவனை
உன் நினைவுகளே துணை என
மாற்றியவள் நீ
தென்றல் காற்று மெல்ல வந்து
சில்லென்று தொடுகிறது
உன்னை நினைக்கையில்
மென்மையான உன் உரையாடல்
இரவில் ராஜாவின் மெலடி கேட்ட
இன்பம் தரும்
உன்னுடன் செல்ல செல்ல
சண்டைகளிட்ட போதெல்லாம்
இந்த கடல் அலையிடம் தான் வந்து
என் சோகம் பகிர்வேன்
என் சோகமெல்லாம் உள்வாங்கி
மன அமைதியை திருப்பித்தரும்
மீண்டும் உன்னிடம் பேச வைக்கும்
உன்னை பார்க்காத அந்நாட்களில்
இந்த நிலவை காண்பேன் அது
காணாத உன்முகத்தை பிரதிபலிக்கும்
இதோ
கடல்தாண்டி வந்து உன் கரம்
பிடித்தேன்
விரல்களின் இடைவெளியில்
உன் விரல்கோர்த்து
கடற்கரை மணலில் நம் கால்தடம்
பதித்து அமர்கிறோம்
உன் உதடு சிரித்தாலும்
உன் மனதின் சஞ்சலம்
நானறிவேன் அன்பே
பெற்றோரை பிரிந்து
கடல்தாண்டி என் கரம் பிடித்து வந்த
உன் சோகம்
சீறிப்பாய்ந்து வந்த கடல் அலை
நம் அருகே வந்து பவ்வியமாய் கால் வருட
உனக்கும் சொல்லியிருக்கும் ஒரு சேதி
இருக பற்றிய உன் கைகள் எனக்கும் உணர்த்தியது அதை
இயற்கை என்னும் தேவதைகளுடன்
என் கைகள் பற்றிய என் காதல் தேவதை
என் வாழ்க்கைக்கு அழகாய்
வண்ணம் தீட்டிக்கொண்டிருக்கிறது

