பள்ளி பருவத்தில்
இனிப்பு கிடைக்கும் என்று
விடுமுறை தினமாய்
இருந்தாலும் பள்ளிக்கு சென்றேன்
மகிழ்ச்சியாய் இதயத்தில்
தேசிய கொடி குத்திக்கொண்டு
தொலைக்காட்சியில்
பட்டிமன்றமும் , திரைப்படமுமாய்
கழிந்தது பொழுது
விவரம் தெரிந்த வயதில்
காந்தியும், பகத்சிங்கும் ,
சுபாஷ் சந்திர போஸும்
ரத்தம் சிந்தி வாங்கி தந்ததாய்
சொன்னார்கள்
எதற்கு என்றேன்
வெள்ளையனிடம் அடிமையாய்
இருந்தோம் என்றார்கள்
72 வருடத்திற்கு பிறகும்
மனதில் கேள்வி மறையவில்லை
இன்று சுதந்திரமாய் நாம்
இருக்கிறோமா என்று ?!
பிஞ்சு குழந்தைக்கும்
சுதந்திரமாய் விளையாட
முடிவதில்லை எனில்
யாரிடம் எங்கு பறிகொடுத்தோம்
நம் சுதந்திரத்தை ?!
வெள்ளை சட்டை அணிந்த
அரசியல்வாதியிடம்
அடகு வைத்து விட்டோமோ
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
இன்றும் ஏன் கை ஏந்துகிறோம்
வெளிநாட்டில்
கற்பை போல காத்த சுதந்திரம்
இன்று காற்றில் கரைய பார்க்கிறதே
மூவர்ண கொடி
அது நம் முன்னோர்களின்
மூச்சிருக்கும் கொடி
தொப்புள்கொடி உறவு போல்
நம் மரணம் கடந்தும் தொடரும்
அடுத்தவரிடம்
தேடும்வரை எங்கும் காண கிடைக்காது
சுதந்திரம்
உன் வீட்டில் இருந்து
தொடங்கு..
பெண்ணை சுதந்திரமாய்
வளர்த்து
சொல்லிக்கொடுங்கள்
உன் முன்னோர்கள்
வீரர்கள் என்று
நாளைய தலைமுறையேனும்
சுவாசிக்கட்டும்
சுதந்திர காற்றை
மண்ணை தொட்டு
விண்ணை எட்டும் வரை
உரக்க சொல்
வந்தேமாதரம்
வந்தேமாதரம்
வந்தேமாதரம் ....
ஜெய்ஹிந்த் !

No comments:
Post a Comment