Monday, January 21, 2019

என் மனம் !

இதோ
சண்டையிட்டு
கொண்டுதானிருக்கிறேன்
காரணமில்லாமலே
இருந்தும் என்னை புரிந்து
பிரியாமலிருக்கிறாய்

தனித்திருத்தலை
சௌகர்யமாய்
பழக்கிக்கொண்டேன்
அது
அசௌகரியத்தை
உணர்த்துகிறது போலும்
உனக்கு

ரயிலில்
பயணிக்கையில்
சன்னலில்
பின்னோக்கி ஓடும்
மரங்கள் போல
என்நினைவுகள்
என்றும் கடந்தகால
வலிகளில்
பயணித்துக்கொண்டிருக்கிறது

ஆயிரம்கால் மரவட்டை போல்
குழப்பமில்லாமல்
முன்னேற தடுமாறித்தான்
போகிறேன்
மண்புழுபோல்
மண்ணில் புதையுண்டு
கிடக்கிறேன்

அன்பு
அக்கறை
இதையெல்லாம் தாண்டி
ஈர்க்கப்பட்டதின்
காரணம் நானறியேன்

கனல் போல்
எரியும் என் இதயத்தில்
கானல் நீர் போல் வந்து
அணைத்திடுவாயோ

இதோ
சண்டையிட்டு
கொண்டுதானிருக்கிறேன்
உன்னிடம்


No comments: