அரைப்பெடல் அடித்து
ஆனந்தமாய் சுற்றிய
காலம்தனில்
அரை வயிறு உண்டாலும்
நிறைந்திருந்தது மனது
உடன் பயணித்து
என் உயர்வில் பங்கெடுத்து
இன்று சாய்வு நாற்காலியில்
அமர்ந்து ஓய்வெடுக்கும்
தந்தையை போல
சுவர் ஓரமாய் சாய்த்து
வைக்கப்பட்டிருக்கிறது
அப்பாவின்
"மிதிவண்டி

No comments:
Post a Comment