அளவில்லா
அன்பையும்நேசத்தையும்
புன்னகையையும்
நீங்கள் யாரிடமிருந்தும்
பெற்றிருந்தீர்கள் என்றால்
நினைக்காதீர்
விலகுதல் என்பது
கனவிலிருந்து
விழிப்பது போல
எளிதானதென்று
சிந்திக்காமல்
கிறுக்குகிறேன்
என்
சிந்தனை முழுவதும்
நீயென ஆனா பின்
வசதியாய்
வாழ்கிறேன்
அறை முழுவதும்
பணம் நிரப்பி அல்ல
என் இதய அறை முழுவதும்
உன் நினைவுகளை நிரப்பி
விழி மூடினால்
சுகமாய் உன் நினைவு
வேறென்ன கேட்டு விட
போகிறேன்
இறைவா! உன்னிடம் ,
அவள் நினைவுகளையேனும்
விட்டு விடு
என்னிடம்
என்பதை தவிர