Tuesday, July 27, 2021

உன் நினைவுகள்

இன்று வரை 

நான் கிறுக்கிய 

எழுத்துக்கள் எல்லாம் 

கவிதையாய் தெரிவது 

ஏன் எனில் அது உன்னை 

பற்றியே இருப்பதால் 


வெள்ளை காகிதங்கள் 

எல்லாம் வண்ண 

காகிதங்களாய் 

ஜொலிக்கின்றன 

உன்னை பற்றி எழுதுவதால் 


என் பார்வை 

உன்னை காண மறுக்கிறது 

ஆனால் 

என் நாணம் 

உன்னை  காண 

தவிக்கிறது 


நீ பேசும் வார்த்தைகளை விட 

உன் மௌனம் அதிக அர்த்தங்களை 

கடத்துகிறது எனக்குள் 


உன் துடிக்கும் 

இதயமும் 

தவிக்கும் நினைவுகளும் 

எனக்காய் இருக்கவே விரும்புகிறது 

என் மனம் 


எண்ணற்ற 

நட்சத்திரங்களுக்கு இடையில் 

ஒளிரும் நிலவை போல 

உன் நினைவுகள் 

எனக்குள் ஒளிர்கின்றன 


நானும் கூட 

கவிதை எழுதுகிறேனாம் 

அது உனக்காய் அல்ல 

உன்னால் 


நொடியில் உடையும் 

நீர்க்குமிழி போல் அல்லாமல் 

நொடிக்கும் உன்னை நினைக்கும் 

ஓயாத கடல் அலை போன்றது 

எனக்குள் 

உன் நினைவுகள் 


No comments: