Thursday, April 13, 2017

காதலி !

வளர் பிறை போல மலர்ந்து முழு நிலவாய்
மாறும் என்றிருந்தேன் ஆனால்
அது தேய் பிறை ஆகி அமாவாசை
ஆகி போனதேனோ ?!?!


ஓடையில் விட்ட காகித கப்பல்
கடலை சென்றடையும் என்று எண்ணும்
சிறுவனாய் ஆகி போனேன் நான் !

என் நிழலினின்றி
எனக்கு வேறு துணை இல்லை என்று
உணர்த்திவிட்டாள் அவள் !

அன்பே ,உன்னோடு வாழ நினைத்தேன்
ஆனால்
இன்று கல்லறையில் புதைத்து விட்டாயடி எனை

கடற்கரை மணலில் நாம் நேற்று
நடந்த பாத சுவடுகள் கூட
மாயவில்லை இன்னும்..
ஆனால்  நீயோ !?!!

தவறுகள் செய்திருப்பின் என்னை தண்டித்துவிடு
என்னை விடுதலை செய்துவிட்டு போய் விடாதே
என் அன்பே !!

என் நினைவுகளாவது
வைத்து கொள் உன் இதயத்தில்
அதிகமாய் உன்னை நேசித்தவன் என்று !!

பழகிய காலங்கள் அனைத்தும் கனவுகளாய்
போனதேனோ !

No comments: