Tuesday, August 29, 2017

நட்பு

ஆயிரமாயிரம் கதைகள் பேசி
தினமும் கழித்தோம் நம் நாட்களை

உனக்கும் எனக்கும் இடையேயான
அன்பின் நெருக்கத்தை (காதலின்)விளிம்பில்
நின்று வேடிக்கை பார்க்கும் இவ்வுலகம்

ஆண் பெண் நட்பென்றால் இச்சமூகம்
மூன்றாம் கண் கொண்டே நோக்கும்

இட்டுக்கதை கட்டுக்கதையில் நம்மை  சேர்த்து
மாய வலை பின்னும் இவ்வுலகம்

பேசி பேசி களைத்தாயோ என்னவோ
இப்போதெல்லாம்  உன் பேச்சு குறைந்தது

மழை நின்ற போதிலும் தென்றல் தீண்டும்போது
தூரல் போடும்  சாலையோர மரங்களை போல

நாம் பேசுவது நின்ற போதிலும் தினமும்
நடக்கும் நிகழ்வுகளில் உன் தாக்கம்
வந்து வந்து போகிறது

No comments: