நிலாவை காட்டி
அது மலை மீது ஏறி மல்லிகை பூ கொண்டுவரும் என
சோறு ஊட்டியபோது சொன்னாள் பொய் ...
பொய் சொன்னால் சாமி கண்ணை குத்தும் என நான்
பொய் சொல்லாமல் இருக்க சொன்னாள் பொய்...
எனக்கு பிடிக்கும் என்ற காரணத்தால் தனது பங்கையும்
சாப்பிடாமல் எனக்கு தருவாள் ..காரணம் கேட்டால்
பசிக்கவில்லை, பிடிக்கவில்லை என சொன்னாள் பொய் ...
ஏதாவது நினைத்து வருந்தி அழுவாள் கேட்டால்
கண்ணை துடைத்து சிரித்து ஒண்ணுமில்லை
என சொன்னாள் பொய் ...
கவிதையின் உவமையில் பொய் அழகு என்றால்
நிஜமான அன்பில் என் தாய் சொன்ன பொய்யும்
அழகு தான் ..
அது மலை மீது ஏறி மல்லிகை பூ கொண்டுவரும் என
சோறு ஊட்டியபோது சொன்னாள் பொய் ...
பொய் சொன்னால் சாமி கண்ணை குத்தும் என நான்
பொய் சொல்லாமல் இருக்க சொன்னாள் பொய்...
எனக்கு பிடிக்கும் என்ற காரணத்தால் தனது பங்கையும்
சாப்பிடாமல் எனக்கு தருவாள் ..காரணம் கேட்டால்
பசிக்கவில்லை, பிடிக்கவில்லை என சொன்னாள் பொய் ...
ஏதாவது நினைத்து வருந்தி அழுவாள் கேட்டால்
கண்ணை துடைத்து சிரித்து ஒண்ணுமில்லை
என சொன்னாள் பொய் ...
கவிதையின் உவமையில் பொய் அழகு என்றால்
நிஜமான அன்பில் என் தாய் சொன்ன பொய்யும்
அழகு தான் ..
No comments:
Post a Comment