Sunday, November 26, 2017

என் அண்ணா !

சகோதர சகோதரி பாசம்
நினைத்தாலே நினைவெல்லாம் பாயசம்

தந்தையால் எங்கும் நம்முடன்
வரமுடியாது என்ற காரணத்தால்
படைத்தானோ சகோதரனை இறைவன்

கண்டிப்பில் அவன் என் தந்தை
அரவணைப்பில் அவன் என் தாய்

அவனுக்கு கிடைக்கும் அன்பளிப்பெல்லாம்
தங்கை எனக்காய் எடுத்து வைத்து கொடுப்பான்

உனக்கு அண்ணா !? என்றால் உன் சந்தோஷம் தான்
எனக்கு முக்கியம் என்பாய்

குறும்புகள் நான் செய்ய ஏனோ பழியை நீ
ஏற்று கொள்வாய்
சமத்து பிள்ளையாய் உனக்கான தாயின் அன்பை
நான் பெற்று கொள்வேன் அவள் மடியிலமர்ந்து

நோட்டு புத்தகத்தில் மயிலரிகை மறைத்து வைத்து
கூட்டு போடும் என தூங்காமல் நானிருந்த இரவுகள்
உனக்கும் தெரிந்திருக்கும்

அதனால் தானே
நீயே குட்டி மயிலிறகை என் புத்தகத்தில் வைத்து
அடுத்த நாள் நான் சந்தோஷத்தில் கூச்சிட்டும் நீ மௌனமாக
புன்னகைத்தாய் அண்ணா ..

மணமான நான் மறுவீடு செல்லும் நாள்
சந்தோஷமும் , சோகமும் கலந்து
அண்ணா ! உன் கண்ணின் ஓரத்தில் எட்டி பார்த்த
கண்ணீர் சொல்லும் உன் பாசத்தை

இவ்வுலகில் தாயின் பாசத்திற்கு இணை உண்டோ என்றால்
இணை இல்லை துணை உண்டு என்பேன் நான்

இன்று நீ  என் பிள்ளைகளுக்கு தாய் மாமன்
ஆனால்
என்றும் நீ என் அண்ணா !
அடுத்த பிறவியிலும் நீயே வேண்டும் என் அண்ணா !

Monday, November 20, 2017

வருவாயோ !

அழகான காலை
மேகம் மூடிய வானம்
முகம் காட்ட துடிக்கும் சூரியன்
தீடீரென இடி இடித்தது
அட எப்படி ?

விடை தந்தது அம்மாவின் குரல்,
காலையில் கனவு கண்டு படுக்காம
கல்லூரிக்கு கிளம்பு என்று

உன்னை காண போகிறேன்
என்று தெரியாமல் சென்றேன்
கல்லூரிக்கு
உன்னை நான் கண்ட முதல் நாள்

அழகான இசை எதுவென்றால் 
உன் கால் கொலுசின் ஒலி என்பேன் 

உன் கண் இமைக்கும் ஒவ்வொரு முறையும் 
என் உயிரும் சிறை கொள்ளுதடி 

காதல் ஒரு மாயை
வந்த நேரம் தெரிவதில்லை-அது
சொல்லிக்கொண்டும் வருவதில்லை

காதலுக்கு மூன்றெழுத்து 
அவளால்வந்த கவிதைக்கும்
மூன்றெழுத்து

பூ போல உன்னை தாங்குவேன் என 
உணர்த்த காதலுடன் பூச்செண்டு கொண்டு 
காத்திருக்கிறேன் 
பூச்செடியில்  முள்ளும் உண்டு என 
உணர்த்தி போவாளோ !?

உணர்வுகள்தான்
வாழ்வின் ஆதாரம் என்றால் 
உன் மேல் நான் கொண்ட 
காதல் உணர்வு தான் 
என் வாழ்வின் ஆதாரம் 

ஆணின் அன்பில்
மென்மை இல்லாமல்
இருக்காலம் ஆனால்
உண்மை இருக்கும்

பெண்ணின் அன்பில்
மெய்யும் இருக்கும்
தாய்மையும் இருக்கும்

காத்திருக்கிறேன், விடை சொல்
என்னை தாலாட்ட வருவாயோ!?
உன் காதல் சொல்ல வருவாயோ !?

Tuesday, November 7, 2017

உறவு !

செல்ல பிராணி ஒன்று வளர்த்தேன் -அதை
செல்லம் கொடுத்து வளர்த்தேன் 

செல்லும் இடமெல்லாம் அழைத்தேன் -அதை 
செல்ல பெயரிட்டு அழைத்தேன்

உண்ண உணவும் கொடுத்தேன் வளர வளர
உள்ளத்தில் அன்பும் கொடுத்தேன்

தனிமையின் தோழன் என நினைத்தேன்
உன்னை கண்டபின் என் எண்ணத்தை மறந்தேன்

உன்னுடன் விளையாடிய நாட்கள் நினைத்தேன்
என்றும் எண்ணத்தில் நினைத்து  மகிழ்ந்தேன்

விடுமுறையில் உன்னை பிரிந்தேன்  பாட்டி வீட்டில்  உன்னை
நினைத்து என்  கன்னத்தின் ஓரத்தில் அழுதேன்

மீண்டும் வீடு திரும்பியதும் உன்னை தேடினேன் -உன்னை
காணாமல் என் மனம் வாடினேன்

நீ தொலைந்ததாய் பெற்றோர் சொல்ல கேட்டேன்
சொன்னேன்
உனை காணாமல் இனி உணவு உன்ன மாட்டேன்

உனை தேடுவதாய் வாக்கு ஒன்று தந்தார்கள்
என்னுடன் வீதிக்கு தேடவும் வந்தார்கள்

என் மனம் போல் கதிரவனும் மறைந்தான்
வருண பகவானும் எனோ தேட உடன் வந்தான்

நினைத்தேன்  வருந்தினேன் குடை பிடித்து
விதியை நினைத்து வீதியின் ஓரத்தில் அமர்தேன்

தீடிர் என என் கையில் பழகிய முத்தம் , பழகிய ஸ்பரிசம்
உள்ளம் மகிழ்ந்தது உணர்வு புரிந்தது குடைக்குள் வந்தது

தொலைத்ததாய் நினைத்த உறவு
ஒரு குடையில் இருவரையும் இணைத்த
மழைக்கு நன்றி !