நிலத்தை போர்த்தி அழகாக்கும்
பச்சைபசேல் வயல்வெளி போல்
அவள் மேனியை மேலும் அழகாக்கி
பச்சை தாவணி போர்த்தி
நடந்து வந்தாள்
தேவதை என
அவளை தீண்டிய தென்றல் காற்று
என்னையும் தீண்டி இன்பம்
பகிர்ந்துகொண்டது
பௌர்ணமி முழு நிலவு போல்
அவள் முகம் அதில்
ஜொலிக்கும் நட்சத்திரம் போல்
அவள் மூக்குத்தி
தமிழை உச்சரிக்கும் அவள் இதழில்
தும்பை பூவின் இனிப்பு
அருகில் வந்து
அவள் கேட்டது எதுவும்
நினைவில்லை
சிரித்தோம் ஏனோ
அறியவில்லை
நீ கடந்து வந்த பாதையெங்கும்
உன் கூந்தல் உதிர்த்த
பூக்களெல்லாம்
வாடி மடிந்தன
உனை பிரிந்த
ஏக்கத்தில்
உன் கால் கொலுசின்
ஒலிகள் உணர்த்தியது
என் மனதில்,
காதல் வருகையின்
சமிக்ஞ்சைகள்
தனிமை இனிமை
என இருந்தேன்
அவள் ஒரு நொடி
பிரிவையும்
சகித்துக்கொள்ள
முடியாமல்
திணறும்
இக்கணம் வரை
உன்னை எண்ணி
வண்ண வண்ண
கனவுகளில்
சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது
என் மனம்
தாயின் கருவறைக்குள்
சுகமாய் இருளில்
இருக்கும் குழந்தை போல்
உன் நினைவுகளில்
நான் தினம் தினம் வாழ்கிறேன்
இதோ
இன்று
ஒற்றை ரோஜாவை
கையில் வைத்து
காதல் சொல்ல-
அதை நீ ஏற்பாயோ
என அறிய
வழிமீது விழி வைத்து
வா என் தேவதையே !
பச்சைபசேல் வயல்வெளி போல்
அவள் மேனியை மேலும் அழகாக்கி
பச்சை தாவணி போர்த்தி
நடந்து வந்தாள்
தேவதை என
அவளை தீண்டிய தென்றல் காற்று
என்னையும் தீண்டி இன்பம்
பகிர்ந்துகொண்டது
பௌர்ணமி முழு நிலவு போல்
அவள் முகம் அதில்
ஜொலிக்கும் நட்சத்திரம் போல்
அவள் மூக்குத்தி
தமிழை உச்சரிக்கும் அவள் இதழில்
தும்பை பூவின் இனிப்பு
அருகில் வந்து
அவள் கேட்டது எதுவும்
நினைவில்லை
சிரித்தோம் ஏனோ
அறியவில்லை
நீ கடந்து வந்த பாதையெங்கும்
உன் கூந்தல் உதிர்த்த
பூக்களெல்லாம்
வாடி மடிந்தன
உனை பிரிந்த
ஏக்கத்தில்
உன் கால் கொலுசின்
ஒலிகள் உணர்த்தியது
என் மனதில்,
காதல் வருகையின்
சமிக்ஞ்சைகள்
தனிமை இனிமை
என இருந்தேன்
அவள் ஒரு நொடி
பிரிவையும்
சகித்துக்கொள்ள
முடியாமல்
திணறும்
இக்கணம் வரை
உன்னை எண்ணி
வண்ண வண்ண
கனவுகளில்
சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது
என் மனம்
தாயின் கருவறைக்குள்
சுகமாய் இருளில்
இருக்கும் குழந்தை போல்
உன் நினைவுகளில்
நான் தினம் தினம் வாழ்கிறேன்
இதோ
இன்று
ஒற்றை ரோஜாவை
கையில் வைத்து
காதல் சொல்ல-
அதை நீ ஏற்பாயோ
என அறிய
வழிமீது விழி வைத்து
உன் வருகைக்காக
காத்திருக்கிறேன்
வா என் தேவதையே !
No comments:
Post a Comment