ஒற்றை ஆலமரம்
யார் விதைத்த விதையில்
உதித்ததோ நானறியேன்
ஆனால்
சுட்டெரிக்கும் சூரியனின்
வெயிலில் இருந்து
தினம் எங்களை
காப்பாற்றும்
குடும்ப அட்டையில்
சேர்க்காத
குடும்பத்து உறுப்பினர் போல
வாழ்வியலில்
விசாலமாய்
கலந்திருக்கும்
விழுதுகள் பரப்பி
வேறூன்றி
படர்ந்திருக்கும்
அரும்மருந்தாய்
தன்னையே அர்பணித்திருக்கும்
பஞ்சாயத்து பல
கண்டிருக்கும்
சந்தைகள் பல
கூடியிருக்கும்
வாலிப வயதினரின்
ரகசியம் பல
தன்னுள் கொண்டிருக்கும்
தலைமுறை
பல கண்டிருக்கும்
தன்னுள் பல
பேர் அறியா
ஜீவராசிக்களுக்கும்
அடைக்கலம்
கொடுத்திருக்கும்
ஊஞ்சலாட
விழுதுகள்
கொடுத்த மரம்
மரங்கொத்தி
கொத்துகையில்
வலிக்கவில்லை
மனிதா,
வெட்ட
நீ
கோடாளி கொண்டு
வருகையில்
ஏனோ
விழுதுகள்
மரத்தின்
கண்ணீர் துளிகள்
போல தெரிகிறது
வெயிலில் நின்று
வெட்டுகையில்
இளைப்பாற
எங்கு செல்வாய் நீ
யோசித்ததுண்டா ?
வரும்
சந்ததிக்கு
என்ன சொல்வேன்
பலன் பல தந்த
மரத்தை அழித்தோம்
சாலை எனும் ஒரு
பலன் பெற
என்றா ?!
மரத்தின்
அருமை தெரியாமல்
சாலையின் பெருமை
சொல்லும்
மூடனிடம்
என்ன சொல்ல
மழை நீர்
வேண்டினும்
வெட்டாமலிரு
நீங்காத
நினைவுகள்
தந்து
எங்கள் ஊருக்கு
என்றும்
முகவரியாய்
இருக்கும்
ஒற்றை ஆலமரம் ..

No comments:
Post a Comment