Friday, June 28, 2019

மனிதனின் நிறம்


மனிதனின் நிறம்
என்றும் தண்ணீரை போல

இருக்கும் இடத்திரிக்கேற்ப
தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும்
பச்சோந்தி
போல

சூழ்நிலைக்கேற்ப
தன் குணத்தை
மாற்றிக்கொள்வான்

தோலின் நிறம்
அவன் சுபாவத்தை
பிரதிபலிப்பதில்லை
இருந்தும்

வெள்ளையாய் இருப்பவன்
பொய் சொல்லமாட்டான்
என காலம் காலமாய்
நம்பி
பொய் பரப்பி வருகின்றனர்

கண் உள்வாங்கும்
ஒளியினூடே கடத்த படும்
நிறம்
சில நேரம் காட்சிப்பிழை
ஆகலாம்

மரபியல் சுழற்சியில்
பாரம்பரிய மாற்றத்தில்
உண்டாகும் நிறம்கொண்டு
எடைபோடாதே

பழக
தொடங்குகையில்
தோன்றும் நிறம்
பழகிய பின்
நிறமறியதாய் தோன்றலாம்

மனித
மனங்களுக்குள்
இருக்கும்
மிருகமும், மனிதமும்
அவனை
வெளிப்படுத்தும்
அகோரமாகவும்
அழகாகவும்

நிர்வாணமான
குழந்தையை
காணும் கண் கொண்டு
பார்க்க பழகி கொள்
அது உன்னில் கடத்துவது
சஞ்சலமற்ற
புன்னகை மட்டுமே

வெளி நிறம்
ஒரு மாயை
உள் நிறம் காண்
மகிழ்வாய்
வாழ்வாய்



No comments: