இன்று வரை
நான் கிறுக்கிய
எழுத்துக்கள் எல்லாம்
கவிதையாய் தெரிவது
ஏன் எனில் அது உன்னை
பற்றியே இருப்பதால்
வெள்ளை காகிதங்கள்
எல்லாம் வண்ண
காகிதங்களாய்
ஜொலிக்கின்றன
உன்னை பற்றி எழுதுவதால்
என் பார்வை
உன்னை காண மறுக்கிறது
ஆனால்
என் நாணம்
உன்னை காண
தவிக்கிறது
நீ பேசும் வார்த்தைகளை விட
உன் மௌனம் அதிக அர்த்தங்களை
கடத்துகிறது எனக்குள்
உன் துடிக்கும்
இதயமும்
தவிக்கும் நினைவுகளும்
எனக்காய் இருக்கவே விரும்புகிறது
என் மனம்
எண்ணற்ற
நட்சத்திரங்களுக்கு இடையில்
ஒளிரும் நிலவை போல
உன் நினைவுகள்
எனக்குள் ஒளிர்கின்றன
நானும் கூட
கவிதை எழுதுகிறேனாம்
அது உனக்காய் அல்ல
உன்னால்
நொடியில் உடையும்
நீர்க்குமிழி போல் அல்லாமல்
நொடிக்கும் உன்னை நினைக்கும்
ஓயாத கடல் அலை போன்றது
எனக்குள்
உன் நினைவுகள்