Tuesday, May 1, 2018

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

வெயிலில் வியர்வை சிந்தி
நாம் சோற்றில் கை வைக்க
சேற்றில் கால் பதித்து
உழைக்கும் விவசாயிக்கும்

மணம் தனை மறந்து
மனம் தனை  தூய்மையாக்கி
நம் சுற்றம் தூய்மையை குறிக்கோளாக்கி
உழைக்கும் துப்புரவு தொழிலாளிக்கும்

காலம் நேரம் பாராமல்
பிணி என்று யார் வந்தாலும்
முகம் மலர பணிவிடை செய்து
உழைக்கும் மருத்துவருக்கும்
அவர் தன்  துணை நிற்கும்
செவிலியர்க்கும்

தவறி தீயில் விழுந்தாலும்
தவறி கடலில் விழுந்தாலும்
இயற்கை தான் தவறி நடந்தாலும்
உயிரின் மேன்மை அறிந்து
நம் உயிரை காக்க காத்திருக்கும்
தீ மற்றும் மீட்பு குழு அன்பர்களுக்கும்

எத்தனை நாகரீக உடைகள் வந்தாலும்
தன் கை கொண்டு தறி இயக்கி நெசவு
செய்யும் என் கைத்தறி நெசவாளர்களுக்கும்

உடல் உழைப்பின்றி
குளிரூட்டபெற்ற அறையில்
இருந்தாலும் தன் மூளையை கொண்டு
உழைக்கும் மின்பொறியாளர்களுக்கும்

எந்தவகை ஆயினும்
உழைத்தால் உயர்வுண்டு என்று
நம்பி உழைக்கும்
அத்தனை உழைப்பாளர்களுக்கும்
என் இதயம் கனிந்த
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

No comments: