Tuesday, May 8, 2018

ஊடகம்


காணாத உலகை
கண்முன்னே
கொண்டுவருவான்

இவன் சொல்லி தந்து
நான் கற்றதோ ஏராளம்
ஆனால்
இன்று
தன்னையே மறந்து
நம்மையும்
திக்குத்தெரியாத
காட்டில் விட்டு
வேடிக்கை பார்க்கிறான்

இவன் வழி நடந்து
அரியாசனம் ஏறியவரும்
உண்டு
இவன்தனை நம்பி
வாழ்க்கையில்
கெட்டவருமுண்டு

உலகில் விதைத்த
விளைவுகள் யாவும்
இவன் கைவசம்.

இன்று இவனோ
எடுப்பார் கைப்பிள்ளை
போல் எடுப்பார் வசம்

இவன்
உண்மையை உரக்க சொன்ன
காலம் உண்டு
இன்று
இவன் சொல்லும் செய்திகளை
உண்மையா என்று விவாதிக்க
இவன் நண்பர்கள்
பலருண்டு

இவன் செய்த சாதனைகள் சொல்ல
ஒரு நாள் போதாது
சுதந்திரமாய் இவன் பணி செய்தால்
சுதந்திரத்தையும் நமக்கு
பரிசளிப்பான்

இவன்
பரிணாம வளர்ச்சி கண்டு
விஞ்ஞான துணை கொண்டு
உருவம் மாறி பயணித்து
கொண்டிருக்கிறான்

இவன் மேல் காதல் கொண்டு
உயிரை பணயம் வைத்து
உண்மையை உரக்க சொல்ல
உழைப்பவரும் உண்டு

இவனுக்கு சமூக பொறுப்புமுண்டு
இவனுக்கோர் சமூகத்தில் பெயருமுண்டு
அதுதான்
"ஊடகம் "


No comments: