Wednesday, March 20, 2019

திசையறியா பறவை




சிறகு இருந்தும்
பறக்கும் திசை
அறியாமல்
திக்குத்தெரியாமல்
நிற்கிறேன் நான்

காடாய், மரங்கள்
சூழ்ந்து இருந்த
இடங்கள்




மனிதனின் வளர்ச்சியில்
இன்று
பாலைவனமாய்

கிளைகளில்
கூடுகட்டி
குயிலுக்கும்
அடைக்கலம் குடுத்து
வாழ்ந்த காலங்கள்
அழகானது

என்னை அழைத்து
குழந்தைக்கு சோறூட்டிய
தாய்மார்கள்
இன்று தொலைபேசியில்
தொலைந்த என்னை
தேடிக்கொண்டிருக்கிறார்கள்

அமாவாசை நாளில்
முன்னோர்கள் என எண்ணி
சோறு வைப்பான்
மனிதன்
இருப்பின் அடையாளமாய்
ஆறுதலான ஒரு நாள்
என் வாழ்வில்

பின்வரும் நாட்களில்
என்னை பற்றி கவலை பட
நேரமில்லை அவனுக்கு

வானுயர்ந்த கட்டிடங்கள் மேல்
ரசனை கொண்டு
வானுயர பறக்கும்
பறவையின் மேல்
பற்றற்று இருக்கும்
மனிதா

மழை பொழியும்
நாள் என
அழகாய்
கற்பனையில்
கானல் நீர் கண்டு
வாழ்ந்திடும்
மனிதா
உன்னை காண்கயில்

சிறகு இருந்தும்
பறக்கும் திசை
அறியாமல்
திக்குத்தெரியாமல்
நிற்கிறேன் நான்


No comments: