Saturday, March 30, 2019

இதுவும் கடந்து போகும் !

வாய்ப்பு கிடைத்தால்
மனிதன் மிருகமாவான்
என அறியாமல்
வாழ்ந்து வந்த
வாழ்வு

முகமூடியிட்டு
நல்லவனென
சுற்றித்திருந்திருந்த
வேளையில்
திருடனுக்கு தேள்
கொட்டியதுபோல்
நிகழ்வுகள்

தற்காலிக உணர்வின்
கொந்தளிப்பில் 
இழந்தவைகளின்
கணக்கை ஆராய்ந்து
அழுது் புலம்பாமல்

பொய்யான பிம்பத்தை
இறுக பற்றிக்கொண்டு
தன்னிலை 
மறந்தவேளையில்
செய்த பிழையில்
சுயமறிய
உதவியோர்க்கு
நன்றி

காயப்படுத்தும்
எண்ணமில்லை
காயப்பட்டிருந்தால்
நிபந்தனையின்றி
மன்னிப்பு கேட்பதில்
எனக்கு தயக்கமுமில்லை

என்றும்
மெய்யான
அன்பின்
பயணத்தில்
நெருஞ்சிமுள்ளாய்
என்னை
கண்டிருந்தால்
தூக்கியெறிந்திடுங்கள்

ஏனெனில்

வாழ்வில்
இதுவும் கடந்து போகும்

No comments: