Sunday, February 5, 2017

தேடினேன் !

பாசம் என்பதை அறிய
தாயை தேடினேன்
கிடைக்கவில்லை

அறிவு என்பதை அறிய
கல்வியை தேடினேன்
கிடைக்கவில்லை

பணம் என்பதை அடைய
வேலை தேடினேன்
கிடைக்கவில்லை

காதல் என்பதை உணர
காதலியை தேடினேன்
கிடைக்கவில்லை

ஞானம் என்பதை அடைய
ஞானியை தேடினேன்
கிடைக்கவில்லை

தேடியது கிடைக்கவில்லை
தேடாமல் ஒன்று
கிடைத்தது -அது
" மரணம் "


No comments: