Monday, February 6, 2017

சொல்வாயா உன் காதலை ?!

பகலை இரவு அழித்தாலும்
இரவை பகல் அழித்தாலும் 
உன்னை என் மனதிலிருந்து 
அழிப்பதில்லை 

நிலவை கண்டதும் சூரியன் 
மறைவது போல் என்னை
கண்டதும் நீ வீட்டினுள் 
மறைவதேனோ ?

அடி பெண்ணே !
உன்னை ஒரு முறை 
பார்த்ததற்கே என் மனம் தவிக்கிறதே ..
தினம் உன்னை  காணாமல் என் மனம் 
 ஏனோ பரிதவிக்கறேதே. !

உன்னிடம் பேச எனக்கு வெட்கம் 
பேசாமல் போனாலோ என் மனதில் 
துக்கம் 

நான் பார்க்கும் பொருளாக
 நீ இருக்கிறாய் 

நான் கேட்கும் இசையாக 
 நீ இருக்கிறாய் 

நான் உணரும் காற்றாக 
நீ இருக்கிறாய் 

எல்லாம் ஆகா நீ இருக்கிறாய் 
ஆனால் 
நான் நானாக இருப்பதில்லை 

காதலை நீ சொல்வாய் என 
நான் காத்திருக்க 
காலங்கள் நமக்காக காத்திருக்க 
மறுப்பதேனோ !

உன் கண்கள் பேசும் வார்த்தைகளை 
உன் உதடுகள் பேச மறுப்பதேனோ 


இதோ உன் வீட்டு வாசலில் 
என் இதயத்தை திறந்து -நீ 
வருவாய் என
காத்திருக்கிறேன் 
சொல்வாயா 
உன் காதலை ?!

No comments: