தொடக்கம் எனக்கும்
சிரமம் தான் உன்னை போல
எனக்கு வார்த்தை வரவில்லை
உனக்கு இம்மண்ணில் வர வரமில்லை
நீ பெண்ணென்று அறிந்த நிமிடம்
தொடங்குகிறது உனக்கான போராட்டம்
கள்ளிப்பால் தொடங்கி பல வழிகள்
வஞ்சகர்களிடம் -உன்
அஸ்தமனம் காண ..
தப்பி பிழைத்தாய் ஒருவழியாய் எனில்
குடும்பம் காக்கும் பொறுப்பு உன் தலையில்
தம்பிக்கும், அண்ணனுக்கும், அன்னையாய்
நீ !
உன் சொந்தங்கள் உண்ட பின்னே
உனக்கு சாப்பாடு -நீ
உண்டாயோ என கேக்க -மனங்களில்
தட்டுப்பாடு
எல்லோர்க்கும் கிடைத்தது போக
மிச்சமிருந்தால் உனக்கும் பங்குண்டு
இவை உனக்கு பழகிவிட்டதாலோ என்னவோ
உனக்கு இவை பிடித்தது போல இருக்கிறாய்
உன் பிடித்த உடை அணிந்தால் -சொல்லும்
ஒரு கூட்டம் ஆபாசம் என்று ..
ஆபாசம் பார்ப்பவர்களின் மனத்திலென்று
அறியாமல் ..
பெண் சக்தி என்று சொன்னாலும் -இல்லை
பேதை அவள் போதை என சுற்றும் ஒரு கூட்டம்
பெண் வரம் என்று நினைத்தால்
நீ ரணம் ஆக யார் காரணம் ?
பொறுப்பதில் நீ பூமி தாய் தான்
ஆனால் நினைவில் வைத்துக்கொள்
வதைப்பதில் நீ பத்ரகாளி !
சினம் கொண்டு இரு -தீய
மனம் கண்டு அறு நீயே !
The thing women have yet to learn is nobody gives you power. You just take it. ”
சிரமம் தான் உன்னை போல
எனக்கு வார்த்தை வரவில்லை
உனக்கு இம்மண்ணில் வர வரமில்லை
நீ பெண்ணென்று அறிந்த நிமிடம்
தொடங்குகிறது உனக்கான போராட்டம்
கள்ளிப்பால் தொடங்கி பல வழிகள்
வஞ்சகர்களிடம் -உன்
அஸ்தமனம் காண ..
தப்பி பிழைத்தாய் ஒருவழியாய் எனில்
குடும்பம் காக்கும் பொறுப்பு உன் தலையில்
தம்பிக்கும், அண்ணனுக்கும், அன்னையாய்
நீ !
உன் சொந்தங்கள் உண்ட பின்னே
உனக்கு சாப்பாடு -நீ
உண்டாயோ என கேக்க -மனங்களில்
தட்டுப்பாடு
எல்லோர்க்கும் கிடைத்தது போக
மிச்சமிருந்தால் உனக்கும் பங்குண்டு
இவை உனக்கு பழகிவிட்டதாலோ என்னவோ
உனக்கு இவை பிடித்தது போல இருக்கிறாய்
உன் பிடித்த உடை அணிந்தால் -சொல்லும்
ஒரு கூட்டம் ஆபாசம் என்று ..
ஆபாசம் பார்ப்பவர்களின் மனத்திலென்று
அறியாமல் ..
பெண் சக்தி என்று சொன்னாலும் -இல்லை
பேதை அவள் போதை என சுற்றும் ஒரு கூட்டம்
பெண் வரம் என்று நினைத்தால்
நீ ரணம் ஆக யார் காரணம் ?
பொறுப்பதில் நீ பூமி தாய் தான்
ஆனால் நினைவில் வைத்துக்கொள்
வதைப்பதில் நீ பத்ரகாளி !
சினம் கொண்டு இரு -தீய
மனம் கண்டு அறு நீயே !
The thing women have yet to learn is nobody gives you power. You just take it. ”
No comments:
Post a Comment