Monday, March 13, 2017

வாழ்க்கை!

முதல் நாள் பாரத்தோம் அன்றே அறிமுகம் ஆனோம்..!

இரண்டாம் நாள் அன்பில் கலந்தோம்..!

மூன்றாம் நாள் முழுதும் புரிந்தோம்..!

நாளுக்கு நாள் கதைகள் பேசி.!

கேலியிலே பொழுதை கழித்தோம்..!

கிண்டல் செய்து சீன்டி பார்ப்போம்..!

அடிக்கடி சண்டை வரும்..!

ஆனால் பேசாமல் ஒரு நாள் கடந்தது இல்லை !

வாரம் முழுவதும் அலுவலக வேலை 
ஓர் நாள் உன்னுடன் வீட்டிலிருக்க ஆசை  எனக்கு !

வாரம் முழுவதும் வீட்டு  வேலை 
ஓர் நாள் என்னுடன்  இவ்வுலகை ரசிக்க ஆசை உனக்கு !

சின்ன சின்ன சண்டைகள் எல்லாம் விளையாட்டாய் 
கடந்தது  நம் காதல் முன் !


நதியில் விழுந்த இலையும் காதலில் விழுந்த மனமும் ஒன்றுதான் , இரண்டும் தத்தளித்துக் காெண்டே இருக்கும் கரை சேரும் வரை.

எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்வது வாழ்க்கையல்ல!! சிறிய சிறிய சந்தோஷங்களையும்ர சித்துக் கொண்டு வாழ்வதே வாழ்க்கை...!!

நாம் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம்
என் விரல்களின் இடைவெளி
உன் விரல்கள் கோர்க்க
காத்திருக்கிறது
அன்பே வா!

No comments: