Sunday, March 5, 2017

இசை!

தாய் தான் அறிமுகப்படுத்தினாள்
இசையை முதலில் தன் தாலாட்டினூடே

வாலிப பருவம் அடைந்தவுடன்
அறிமுகமாகியது ஓர் நாள் இரவு
இளையராஜாவின் மெல்லிசை

சுகமும் துக்கமும் என்னுடன்
பகிர்ந்துகொண்டது அவரின் இசை

நான் பயணிக்கும் நேரங்களில் எல்லாம்
என்னுடன் பயணித்தது இசை

தூக்கம் இல்லா இரவுகளில் என்னுடன்
தூங்காமல் கண் விழித்தது இசை

என்னை சுவாசிக்க வைத்தது இசை
என்னை காதலிக்க தூண்டியது இசை
என்னை பிறரை நேசிக்க வைத்தது இசை

இசையின் எழுத்துக்கள் எனக்கு புரிவதில்லை
ஆனால் என் உடல்  புகுந்து ரத்த நாளங்களில்
மாற்றம் செய்தது  கத்தியின்றி

இரவும் பகலும் ,மழையும் வெயிலும்
மாறிக்கொண்டிருக்கலாம்

உனக்கும் எனக்குமான பந்தம்
ஒரு போதும் மாறாதே !

Where words fail, music speaks.

Without music, life would be a mistake


No comments: