யார் வரைந்ததோ இந்த அழகான
ஓவியம் வானில் ..?!!
என் பிரமிப்பு நீங்க நெடும் நேரம் ஆனது
ஒரு நாள் பால்ய வயதில் அதிசயமாய்
வானில் கண்ட வானவில் ....
ஏழு வண்ணம் எப்படி கிடைத்தது தேவர்கள்
கையில் வானில் வானவில் வரைந்திட....
தேவர்கள் நடக்கும் பாதை அது என
என் வீட்டு பாட்டி சொல்ல வாய் பிளந்து கேட்டிருக்கிறேன்
வாலிப வயதில் யோசிக்கையில் அது
யார் யாருக்கோ அனுப்பிய காதல் மடல்
என தோன்றியது ....
காதல் நிராகரிக்கையில் மறைந்திடும் போலும் !?
இல்லை அது வான மங்கையர்
இட்ட வண்ண கோலமோ ?!
விஞ்ஞானம் நீ தோன்ற பல காரணம்
சொன்னாலும் இன்றும் என்றும்
உன்னை அதிசயமாய் தான் காண்கிறேன் ...
ஓவியம் வானில் ..?!!
என் பிரமிப்பு நீங்க நெடும் நேரம் ஆனது
ஒரு நாள் பால்ய வயதில் அதிசயமாய்
வானில் கண்ட வானவில் ....
ஏழு வண்ணம் எப்படி கிடைத்தது தேவர்கள்
கையில் வானில் வானவில் வரைந்திட....
தேவர்கள் நடக்கும் பாதை அது என
என் வீட்டு பாட்டி சொல்ல வாய் பிளந்து கேட்டிருக்கிறேன்
வாலிப வயதில் யோசிக்கையில் அது
யார் யாருக்கோ அனுப்பிய காதல் மடல்
என தோன்றியது ....
காதல் நிராகரிக்கையில் மறைந்திடும் போலும் !?
இல்லை அது வான மங்கையர்
இட்ட வண்ண கோலமோ ?!
விஞ்ஞானம் நீ தோன்ற பல காரணம்
சொன்னாலும் இன்றும் என்றும்
உன்னை அதிசயமாய் தான் காண்கிறேன் ...
No comments:
Post a Comment