Sunday, March 26, 2017

விவசாயி

உண்ணும் ஒவ்வோர் அரிசியிலும் உண்ணுபவர் பெயர் 
இருக்குமோ இல்லையோ நிச்சயம் உன் பெயர் இருக்குமே 
எனது அருமை விவசாயியே  !!

மேற்கத்திய கலாச்சாரா உணவை உண்டு பீற்றி கொள்ளும் 
நாம்- ஏனோ நம் பாவம் விவாசியை மறைமுகமாய் 

விவசாயி கடனும் சரி அதன் தள்ளுபடியும் சரி பயன் பெறுவது 
விவசாயி அல்ல பண முதலைகள் மட்டுமே !


தரமான உணவை ஏற்றுமதி செய்து விட்டு கழிவுகளை இறக்குமதி 
செய்யும் நம் அரசியல் வாதியின் பிடியில் அழிகின்றான் அவன் !

அவன் போராடுவது தன் வம்சம் செழிக்க அல்ல 
நம் வம்சம் ஆரோக்கியமாய்  வாழவே 

ஒவ்வொரு வேளை   உணவு உண்ணும்
அவனை நினை !

அவனை நீ புறம் தள்ளினால்  -நீ இறக்கும் போது 
வாய்க்கரிசி போடா கூட அரிசி இருக்காது !

No comments: