Thursday, June 22, 2017

மலர்

இன்று பூக்கும் மலர் போல நான்
மொட்டாய் இருக்கையில்
யோசித்ததுண்டு எங்கு செல்வேன் நான் என்று

கோவிலில் அனைவரும் வணங்கும்
கடவுளின் கழுத்தில் மாலையாகவா ?

இல்லை கோவிலின் வெளியில் நிற்கும்
வண்டிகளின் முன் அலங்கார பொருளாகவா ?

இல்லை அழகானே பெண்ணின் கூந்தலிலா ?
இல்லை அன்பான அம்மா அவள் பிள்ளையின்
தலை வாரி பூச்சூட போகிறாளோ ?

இல்லை பணி காலம் முடிந்து பிரியா விடை
பெறும் அவரின் கழுத்திலா ? இல்லை
உயிர் பிரிந்து கிடக்கும் ஒருவரின் சடலத்திலா ?

யோசித்து யோசித்து பூவாய் பூத்தும் பறிக்க படாமல்
கருகி போனேன் முதிர் கன்னிபோல்


மலர்













No comments: