யார் இவள்
வானத்து தேவதையோ
வானவில்லின் பொன்மகளோ
மயிலிறகின் ஸ்பரிசம்தனை
மறக்காமல் தந்திடுபவளோ
முன்காலை சூரியனின் பினாமியோ
சாயங்கால சூரியனின் சகோதரியோ
நிலவின் ஒளி தந்த நீ அவள் தோழியோ
இல்லை
அந்த நிலவே நீ தானோ ?
அழகின் அட்சயபாத்திரமோ ?
அவள் மேல் கொண்ட மோகத்தை கரைக்கும்
இவள் ஆகாய தாமரை யோ ?
காலையில் கண்விழித்து பார்க்கும்
உள்ளங்கை குறுந்செய்தியோ ?
கவிகள் வார்த்தை தேடி திண்டாடும்
அழகின் பிரபஞ்சமோ ?
அழகான ஓவியமோ இல்லை
எதிலும் எழுதாத காவியமோ ?
ஆர்ப்பரிக்கும் கடல் அலையோ
இல்லை அமைதியின் இமயமோ ?
முட்கள் கொண்ட மலரோ
இல்லை
முத்தத்தின் கொள்முதல் நிலையமோ ?
யார் இவள் விடை தெரிய காத்திருக்கிறேன் ..
வானத்து தேவதையோ
வானவில்லின் பொன்மகளோ
மயிலிறகின் ஸ்பரிசம்தனை
மறக்காமல் தந்திடுபவளோ
முன்காலை சூரியனின் பினாமியோ
சாயங்கால சூரியனின் சகோதரியோ
நிலவின் ஒளி தந்த நீ அவள் தோழியோ
இல்லை
அந்த நிலவே நீ தானோ ?
அழகின் அட்சயபாத்திரமோ ?
அவள் மேல் கொண்ட மோகத்தை கரைக்கும்
இவள் ஆகாய தாமரை யோ ?
காலையில் கண்விழித்து பார்க்கும்
உள்ளங்கை குறுந்செய்தியோ ?
கவிகள் வார்த்தை தேடி திண்டாடும்
அழகின் பிரபஞ்சமோ ?
அழகான ஓவியமோ இல்லை
எதிலும் எழுதாத காவியமோ ?
ஆர்ப்பரிக்கும் கடல் அலையோ
இல்லை அமைதியின் இமயமோ ?
முட்கள் கொண்ட மலரோ
இல்லை
முத்தத்தின் கொள்முதல் நிலையமோ ?
யார் இவள் விடை தெரிய காத்திருக்கிறேன் ..
No comments:
Post a Comment