Saturday, October 21, 2017

பித்து !

பிடித்ததை எழுத யாரும் வேண்டாம்
பிடித்ததை பிடித்தது என்று சொல்ல
பிடித்தவர்கள் வேண்டும் போலும் !

படித்தவர்கள் படிக்காமல்
பிடித்தவருக்காக பதிகத்தை பிடித்தது எனும்போது
பித்துபிடித்தது போல் ஆகுவது என் மனம்

பின் பக்கமாய் ஏறி  யாரும் கோயிலில்
பிரார்த்தனை செய்வதுண்டோ நான் அறியேன்
பின்புத்தி கொண்டு யோசித்தேனானும்
பிறசொல் கேளாதவனானேன்

பிதற்றி கொண்டு எழுதினேனாயினும்
பித்து பிடிக்காமல் படித்தவர்க்கும்
படிக்காமல் பிடித்தது எண்ணுவோர்க்கும்

பித்து பிடித்தது என ஊர் சொன்னால்
பிரம்பெடுத்து என்னை அடிக்க வந்தால்
பிரடி தெறிக்க ஓட ஆயத்தமாவேன் !

No comments: