Wednesday, February 7, 2018

என்ன தவம் செய்தேனோ


 பெயர்தான் கவிதை என்றால்
எனக்கு பிடித்த சிறு கவிதை இவள்

இசை தான் மொழி  என்றால்
எனக்கு பிடித்த மெல்லிசை இவள்

இனிப்பு தான் உணவென்றால்
எனக்கு பிடித்த இனிப்பு பலகாரம் இவள்

தமிழ்தான் இவள் மொழி என்றாலும்
தலைக்கனம் இல்லாதவள்

கதவின் பின்னால் ஒளிந்திருந்து
எட்டி பார்க்கும்  இவள் பார்வை தான்
என் மனதில் பதிந்த ஓவியம்

இவளை உவமை சொல்லி
ஒப்பிட்டால் உவமைக்கு
பெருமையா  இல்லை
இவளுக்கு பெருமையா ?
நானறியேன்

இறைவன் படைத்த
படைப்பில் உன்னதம்
இவள்

வீடு செல்லும் போதெல்லாம்
ஓடி வந்து முத்தமிடும்
இவள்
என் மகளாய் பெற
என்ன தவம் செய்தேனோ



No comments: