Friday, February 9, 2018

யாரிவாரோ !?

இதுவரை
உன்னை ஆயிரம் முறை
பார்த்திருப்பேன்
ஆனால்
இன்னும் நான் உன்னை
முதன் முதல் பார்த்த
நொடி என் நெஞ்சை விட்டு
நீங்கவில்லை

அதற்குள்
நமக்குள் பிரிவு
மூச்சடைக்கிறது

எத்தனை இரவுகள்
இன்னும் நீளாதோ என
ஏங்கியிருப்பேன்
இன்று
தூக்கமில்லா
இரவு கடக்கையில்
கண்ணும் தூங்கவில்லை
காரணமும் தெரியவில்லை
தேய்பிறையில்
என் நினைவுகளின்
பிம்பம் மட்டும் மிச்சம்

விட்டுக்கொடுத்தேன்
உனக்காய் எல்லாவற்றையும்
இன்று
உன்னையே
விட்டு விட  சொல்கிறாய்
என்னால் முடியவில்லை

என்மேல்விழுகின்ற
மழை நீரில்
என் கண்ணீரை
யாரிவாரோ !?

No comments: