Wednesday, February 28, 2018

மனிதா

மனிதா
உன் அரக்க குணத்திற்கு
இனம் காரணமில்லை
தமிழனை கொன்றாய்
இலங்கையில்

மனிதா
உன் அரக்க குணத்திற்கு
மதம் காரணமில்லை
எல்லா மதத்தவனையும்
கொல்கிறாய்
உலகெமெங்கும்

மனிதா
உன் கொடூர
குணத்திற்கு
குழந்தையும்
தப்பவில்லையோ

தாய்ப்பால் குடிக்க வேண்டிய
குழந்தைகள்
ரத்தக்களத்தில்,
புகைப்படம் ஆயினும்
என் கண்களீல் ரத்தம்
பீறிட்டு வருகிறது

உணவு பொட்டலம் போல்
குண்டை வீசுகிறாய்

கடவுள் உண்டென்று
நினைத்திருந்தேன்
மனிதா ,
இதை காணும் போது
அவனையும்
நீ கொண்டிருக்க கூடும்
என எண்ணுகிறேன்

இலங்கை என்றாலும்
சிரியா என்றாலும்
வாழும் மனிதன்
உடலில் ஓடுவது
சிவப்பு குருதிதான்
என நீ அறியாத வரை

பிணம் தின்னும்
கழுகு கூட்டமாய்
மனிதன்
மாறிக்கொண்டுதானிருப்பான்

புதியதொரு உலகம் பிறக்கும் வரை

No comments: