Sunday, August 23, 2020

குழந்தையின் குமுறல்

பத்து மாதம் தான் 

என்னையும் சுமந்து 

பெற்றிருக்க வேண்டும் 

நீ 

 

எல்லா பிள்ளையும் போல 

உன் வயற்றில் உதைத்து 

விளையாடிருக்க வேண்டும் 

நான் 


எல்லா தாயையும் போல 

எனக்காய் உன் ஆசைகளை 

தியாகம் செய்து 

உண்ணும்போதும் உறங்கும்போதும் 

எனக்காய் சிந்தித்து 

என்னை வலியினூடே 

பிரசவித்திருக்க வேண்டும்

நீ 


பிறந்த நாடு முக்கியம் 

என்றுணர்ந்த நீ 

பெற்ற  பிள்ளைக்கு 

உன் பாசம் முக்கியம் 

என்று உணர 

தவறியதேனோ ?


தோள் கொடுப்பான் 

தோழன் சரி தான் 

பெற்ற தாயின் பாசம் 

தர இயலுமோ 

என் யோசித்தாயா 

நீ? 


குழந்தையின் அன்பை உதறி 

நீங்கள் சொல்லும் காரணங்கள் 

எல்லாம் ரணங்களுக்கு 

மருந்தாகாது 


உறவுகளுக்குள் 

சுவர் எழுப்பி 

இறகுகளை உதிர்த்து 

பறக்க சொல்லுகிறீர்கள் 

என்னை 

பறந்திடத்தான் 

இயலுமோ ?


உங்களை நினைத்து 

பீறிட்டு வரும் 

என் அழுகையின்  சத்தம் 

குண்டுகள் தாங்கி பறந்து வரும் 

போர் விமானத்தை விட 

பேரிறைச்சல் கொண்டது 

என அறிவாயா

 நீ?


குற்றமே செய்யாத 

எனக்கு ஏன் 

வாழ்வதே தண்டனையாய் 

தந்தாய் 

நீ ?



Monday, August 10, 2020

கிறுக்கல்கள் 


"வெளிச்சத்தை கண்டு 

வரும் விட்டில்பூச்சியாய் 

உன்னை கண்டதும் 

காதல் கொண்டு வருகிறேன் 

வீட்டில் பூச்சியாய் ஆகினும் 

என்னை வைத்துக்கொள்ளேன் 

உன்னுடன் "


*******    *******    *********

"ஆறு தலை 

முருகனை காண 

வந்தேன் 

ஆறுதலாய் இருந்தது 

கண்டபின் 

உன் முகம் "


*******    *******    *********

"கதிரவன் 

உதித்துவிட்டான் 

ஊரடங்காம் 

இன்று 

எப்படி சொல்வேன் 

தடுக்க முடியாதபடி 

வந்து செல்லும் 

உன் நினைவலைகலை  பற்றி "


*******    *******    *********

என் வீட்டில் 

பால் திருடிய 

உன் வீட்டு 

பூனைக்கெல்லாம் 

கொஞ்சி முத்தம் கொடுக்கிறாய் 

என் இதயத்தை 

திருடிய உனக்கு 

என்ன தண்டனை 

கொடுக்கலாம் 

என யோசித்துக்கொண்டிருக்கிறேன் 


*******    *******    *********


உன்னை காணாத பொழுதில் 

அனலில் இட்ட புழுவாய் 

துடிக்கிறேன் 

வந்து 

உன் தாவணி தணலில் 

எனக்கு ஓர் அடைக்கலம்

தருவாய் என  

*******    *******    ******** 


 முத்தத்தின் போது 

மட்டும் சிந்தும் 

தேன் 

அவள் உதடு 

***** ***** ******

கண்ணாடி தோழன் 


 சின்னஞ்சிறு வயதில் 

முதன் முதலில் 

உன்னை பார்த்ததும் 

ஆச்சர்யம் ஆட்கொண்டது 


விளையாட்டு 

தோழனாய்  நீ 

கையால் தொட எத்தனித்தேன் 

முடியவில்லை 


நான் சிரித்தால் 

நீயும் சிரித்தாய் 

நான் அழுதால் 

நீயும் அழுதாய் 


உணர்வுகளின் 

பிரதிபலிப்பாய் 

நீ இருப்பதாய் 

காலம் எனக்கு 

உணர்த்தியது 


உன்னை காண்கையில் 

அழகாய் தெரிந்தால் 

என்னவளுக்கும் 

அழகாய் தெரிவதாய் 

உணர்ந்தேன் 


ஏமாற்றம் 

எனை  ஆட்கொள்கையில் 

உன்னிடம் தான் வந்து 

அழுவேன், 

என்னை பிரதிபலிக்கும் 

உன்னைக்காண்கையில் 

கோவம் கொப்பளிக்கும் 


எதிரில் இருக்கும் 

உன்னை அடிப்பேன் 

காயங்களும் வலிகளும் 

எனக்கு 

நிமிர்ந்து பார்க்கையில் 

என் மனதை 

போல் 

துக்கு துகளாய் 

சிதறியிருப்பாய் 


சிதறிய துகள்கள் 

ஒவ்வொன்றும் 

என்னை பிரதிபலிக்கும் 




Wednesday, August 5, 2020


தனிமை

கருவறையின் 
தனிமையை 
போக்கியது 
தொப்புள்கொடி 

சிறு வயதில் 
தனிமையை 
போக்கியது 
நட்புக்கள் 

இளமையின் 
தனிமையை 
போக்கியது 
காதல் 

முதிர் பருவத்தின் 
தனிமையை 
போக்கியது 
பிள்ளைகள் 

பயணத்தின் 
தனிமையை 
போக்கியது 
ராஜாவின் இசை 

இரவின் 
தனிமையை 
போக்கியது 
நிலவு 

இன்று 
முதுமையின் 
தனிமையை 
மரணம் தான் 
போக்கிடுமோ ?


Monday, August 3, 2020

கண்டேன்

முதன் முதலில் 
உன்னை
கண்டேன் 

உன் 
நிழலுக்கும்
குடை பிடிக்கும் 
பேதை என 
நான் மாற
கண்டேன் 

வார்த்தைகள் 
உச்சரிக்கும் 
உன் இதழ்கள் 
கண்டேன் 

போதை ஏறிய 
குரங்காய் 
என் மனம் மாறிட 
கண்டேன் 

காகிதம் கூட 
உன்னிடம் பேசும் 
ஆயுதமாக 
கண்டேன் 

படிக்க படிக்க 
வெட்கம் கூட 
என் துணை நிற்க 
கண்டேன் 

நம்மில் 
வார்த்தைகள் 
வற்றிட கண்டேன் 

கண்ணில் 
ஈரம் நிறைந்திட 
கண்டேன் 

உன் மௌனத்தின் 
நெருக்கம் 
கண்டேன் 

அது 
நம் பிரிவின்
தொடக்கமாய் 
கண்டேன்




Saturday, August 1, 2020

அம்மா 

கருவறையில் 
உருவாக ஆகும்முன் 
என்னை 
உறவாக 
கண்டவள் 
நீயே 

உலகம் காண 
உருவம் கொண்டு 
வந்ததும் 
முதல் முத்தம் 
தந்தவள் 
நீயே 

பசி என்று என் 
நான் உணருமுன் 
வாரி அணைத்து 
பாலூட்டியவள் 
நீயே 

கல்விதனை 
நான் கற்க 
கைபிடித்து 
மணலில் எழுத 
கற்று தந்தவள் 
நீயே 

பசித்திருந்தும் 
உண்ணாமல் 
நான் வர காத்திருந்து 
உணவூட்டி 
பசியாறியவள் 
நீயே 

எனக்கு அடிபட்டாலும் 
என்னை விட 
வலியில் துடிப்பது 
நீயே 

ஊரார் என்னை பற்றி 
ஏது அவதூறு சொல்லினும் 
"என் பிள்ளை" பற்றி 
எனக்கு தெரியுமென 
என் பக்கம் 
நிற்பவள் 
நீயே 

என் ரகசியம் 
அனைத்தும் 
அறிந்த 
என் முதல் தோழி 
நீயே 

எத்தனை பிறவி 
எடுப்பினும் 
வேண்டும் 
என் தாயாய் 
நீயே