கிறுக்கல்கள்
"வெளிச்சத்தை கண்டு
வரும் விட்டில்பூச்சியாய்
உன்னை கண்டதும்
காதல் கொண்டு வருகிறேன்
வீட்டில் பூச்சியாய் ஆகினும்
என்னை வைத்துக்கொள்ளேன்
உன்னுடன் "
******* ******* *********
"ஆறு தலை
முருகனை காண
வந்தேன்
ஆறுதலாய் இருந்தது
கண்டபின்
உன் முகம் "
******* ******* *********
"கதிரவன்
உதித்துவிட்டான்
ஊரடங்காம்
இன்று
எப்படி சொல்வேன்
தடுக்க முடியாதபடி
வந்து செல்லும்
உன் நினைவலைகலை பற்றி "
******* ******* *********
என் வீட்டில்
பால் திருடிய
உன் வீட்டு
பூனைக்கெல்லாம்
கொஞ்சி முத்தம் கொடுக்கிறாய்
என் இதயத்தை
திருடிய உனக்கு
என்ன தண்டனை
கொடுக்கலாம்
என யோசித்துக்கொண்டிருக்கிறேன்
******* ******* *********
உன்னை காணாத பொழுதில்
அனலில் இட்ட புழுவாய்
துடிக்கிறேன்
வந்து
உன் தாவணி தணலில்
எனக்கு ஓர் அடைக்கலம்
தருவாய் என
******* ******* ********
முத்தத்தின் போது
மட்டும் சிந்தும்
தேன்
அவள் உதடு
***** ***** ******
1 comment:
Nice machi
Post a Comment