Monday, August 10, 2020

கிறுக்கல்கள் 


"வெளிச்சத்தை கண்டு 

வரும் விட்டில்பூச்சியாய் 

உன்னை கண்டதும் 

காதல் கொண்டு வருகிறேன் 

வீட்டில் பூச்சியாய் ஆகினும் 

என்னை வைத்துக்கொள்ளேன் 

உன்னுடன் "


*******    *******    *********

"ஆறு தலை 

முருகனை காண 

வந்தேன் 

ஆறுதலாய் இருந்தது 

கண்டபின் 

உன் முகம் "


*******    *******    *********

"கதிரவன் 

உதித்துவிட்டான் 

ஊரடங்காம் 

இன்று 

எப்படி சொல்வேன் 

தடுக்க முடியாதபடி 

வந்து செல்லும் 

உன் நினைவலைகலை  பற்றி "


*******    *******    *********

என் வீட்டில் 

பால் திருடிய 

உன் வீட்டு 

பூனைக்கெல்லாம் 

கொஞ்சி முத்தம் கொடுக்கிறாய் 

என் இதயத்தை 

திருடிய உனக்கு 

என்ன தண்டனை 

கொடுக்கலாம் 

என யோசித்துக்கொண்டிருக்கிறேன் 


*******    *******    *********


உன்னை காணாத பொழுதில் 

அனலில் இட்ட புழுவாய் 

துடிக்கிறேன் 

வந்து 

உன் தாவணி தணலில் 

எனக்கு ஓர் அடைக்கலம்

தருவாய் என  

*******    *******    ******** 


 முத்தத்தின் போது 

மட்டும் சிந்தும் 

தேன் 

அவள் உதடு 

***** ***** ******