Monday, August 3, 2020

கண்டேன்

முதன் முதலில் 
உன்னை
கண்டேன் 

உன் 
நிழலுக்கும்
குடை பிடிக்கும் 
பேதை என 
நான் மாற
கண்டேன் 

வார்த்தைகள் 
உச்சரிக்கும் 
உன் இதழ்கள் 
கண்டேன் 

போதை ஏறிய 
குரங்காய் 
என் மனம் மாறிட 
கண்டேன் 

காகிதம் கூட 
உன்னிடம் பேசும் 
ஆயுதமாக 
கண்டேன் 

படிக்க படிக்க 
வெட்கம் கூட 
என் துணை நிற்க 
கண்டேன் 

நம்மில் 
வார்த்தைகள் 
வற்றிட கண்டேன் 

கண்ணில் 
ஈரம் நிறைந்திட 
கண்டேன் 

உன் மௌனத்தின் 
நெருக்கம் 
கண்டேன் 

அது 
நம் பிரிவின்
தொடக்கமாய் 
கண்டேன்




No comments: