Tuesday, October 20, 2020

 காலையில் கண்விழிக்கும் நேரம் 

கண் தேடுகிறது 

அருகில் உன்னை 

காண 


நடக்கையிலும் 

உன்னை பார்த்தபடி 

நடக்கவே மனம் 

விரும்புகிறது 


எங்கு பயணிக்கையிலும் 

உன்னுடன் பயணிக்கவே 

விரும்புகிறது 

மனம் 


விடை தெரியா 

கேள்விக்கெல்லாம் 

விடையாய் என்முன் 

நீயே 


நீ அருகில் இல்லா 

நாட்கள் 

நிலா இல்லா வானம் போல 

இருண்டு விடுவதாய் 

உணர்கிறேன் 


நீ என்ன என் காதலியா 

இல்லை 

நீ அதற்கும் மேல் 

என் செல்ல 

தொலைபேசியே 


No comments: