Tuesday, January 31, 2017

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

புதிய பூ பூக்கிறது

புதிய அத்தியாயம் தொடங்குகிறது


அதில் 


புதிய சிந்தனை உதிக்கட்டும்


புதிய பாதை திறக்கட்டும் 


எட்டு திக்கும் உன் கொடி பறக்கட்டும் 


எட்டா புகழ் உன் கூட நிற்கட்டும் 


என் நட்பூக்களே எல்லோர்க்கும்


என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


பிரிவு

முதன் முதல் பார்த்தேன்
முதல் காதல் பூத்தது

இரு விழி பார்த்ததால்

இரு உள்ளம் சேர்ந்தது

மூன்றாம் நபர் வருகைக்காக

முதலிரவு அரங்கேறியது

நாளெல்லாம் உன் நினைவு போதும் என்று

நான்கு நாள் நினைத்திருப்பேன்

ஐந்தாம் நாள் ஏனோ உன்னை பற்றிய

ஐயம் தொற்றி கொண்டது

ஆறு படை முருகனே தப்பவில்லை

ஆறு நாள் ஆன நீயும் நானும் எம்மாத்திரம்

ஏழுலகை ஆளும் ஈசனே


ஏழாம் பொருத்தம் என் வாழ்க்கை ஆனதேனோ ?

எட்டு திக்கும் உன்னை போல் ஒருத்தி


எட்டாது எனக்கு என்றானே ?

ஓவியம் தான் என்றாலும்

உன் பிரிவு தாங்கலையே...

பொங்கலோ பொங்கல் !

பொங்கலோ பொங்கல் 

தை மாதம் பிறக்க போகுது ..

பொங்கல் நாளும் வர போகுது ...

குழைந்தைக்கு புது ஆடை வாங்கணும்


பட்டொளி வீசி நடக்கறத பாக்கணும்

பொங்க வைக்க பொருள் வாங்கணும்


கூட கரும்பும் வாங்கணும் ...

மாட்டுக்கு தான் அலங்காரம் பண்ணனும்


மாலை மரியாதை செய்யணும் ..

காணும் பொங்கலுக்கு தான் என் புள்ள


காணாத இடத்துக்கு கூட்டிகிட்டு போகணும்

எல்லாம் தான் யோசிச்சிட்டேன்

ஆனா

இந்த வங்கியில பணம்

எப்ப தான் கொடுப்பங்களோ....

தை பொறந்தா வழி பொறக்கும்

நம்பிக்கையில நான் இருக்கேன் ...

பொங்கலோ பொங்கல் ........ 

வா தமிழா

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு
வீரத்தால் மூவுலகம் ஆண்ட தமிழன்

இன்று ஒரு விவசாயின் மரணம் கூட
தலைப்பு செய்தியாய் கடக்கவில்லை

மரணம் கூட பழகிவிட்டோம்...

பட்டாசுக்கு செலவழிக்கும் நாம்
பக்கத்துக்கு வீட்டு  குப்பனின் பசி அறியோம்

விவசாயத்தை அழித்தோம் இன்று
விவாசியியை அழிக்கிறோம்

தமிழா,
நீ நாட்டுக்குக்காக போராடினாய்
உன் குலம் காக்க போராடினாய்
உன் பெண், பிள்ளை காக்க போராடினாய்
இன்று உன் உயிர் காக்க போராடுகிறாய்

உனக்காக குரல் கொடுக்க ஆள் இல்லை ...

உனக்கு நீயே....
நாளை நமதே ...
நம்பிக்கையுடன் போராடுவோம்
வா தமிழா .....

காத்திருக்கிறேன்

என் இதயத்தில் ஓராயிரம் ஆசைகள்
ஓராயிரம் ஆசைகளும் ஒன்றாய்
உன்னை சுற்றியே இருந்தன...

உன்னை நான் பார்க்கும் போதெல்லாம்
என் மனம் கவிஞனாய் மாறும்

எழுத்தாணி பிடிக்கும்போது ஏனோ
ஊமையாகி போகும்

நான் உன் அருகில் வரும்போதெல்லாம் ஏனோ
நீ விலகி செல்கிறாய்

ஆனால் என் உள்ளத்தில் உன்
நினைவுகளோ நெருங்கி நிற்கிறது

என் கண் எட்டும்  தூரத்தில் நீயில்லை -இருந்தும்
என் கண்கள் உன்னை தேடுகிறது

பாவம் அதற்கு தெரியவில்லை  நீ இருப்பது
என் இதயத்திலென்று ..

உன்னிடம் பேசாமல் இருக்கும் ஒவ்வொரு நொடியும்
வாழ்க்கை கழிகிறது மௌனமாய்

கொட்டி தீர்த்திருக்கிறேன் என் எண்ணத்தை
இதோ என் காதல் கடிதங்களாய்..

என் காதலை உன் நினைவுகளாக்க போகிறாயா ?
இல்லை
வாழ்க்கையாய் மாற்ற போகிறாயா ?

காத்திருக்கிறேன் பதிலுக்காக அன்பே ..
சொல்லிவிடு ...

உறவுகள்

நீயின்றி நான் இல்லை
உணர்த்தியது தாய் சேய் உறவு

உன் எதிர்கால வாழ்க்கையே
என் நிகழ்காலம்
உணர்த்தியது அப்பா மகன் உறவு

இருளுக்கும் நிழல் உண்டு
உணர்த்தியது அண்ணன் தங்கை உறவு

இருப்பதை பங்கிட்டு கொள்ள
உணர்த்தியது நண்பர்களின் உறவு

இவ்வுறவுகள் எல்லாம் கிடைத்தால்
உன் வாழ்க்கை
ஒரு வரம்..


நிலவின் பிம்பம்!

என் தாய் தான் உன்னை 
அறிமுகப்படுத்தினாள் என்னிடம்
சோறூட்டும் போது...

அன்று முதல் நீ ஆனாய் எனக்கு 
தோழியாய்

உன் அருகில் வர வேண்டும் என்பதே 
என் ஆசை லட்சியமாக கொண்டேன்

ஓர் அமாவாசை இரவு -வானில் 
நீ இல்லை ...

சோகத்தில் கண் மூடி இருக்க
ஓர் கொலுசின் ஒலி என் காதில் நுழைய 

கண் திறந்து பார்த்தேன் 
தண்ணீரில் தெரியும் நிலவின் 
பிம்பமாய் அவள் என் எதிரில் 

சந்தித்து கொண்டன இரு ஜோடி கண்களும்
முடிவு கொண்டன ஓர் இதயமாய் வாழ 

இதோ வான் நிலவின் பிம்பம் என்அருகில் 
என்றும் என் வாழ்வில் தேயாத 
நிலா என் துணையாய் ......

கல்வி

மூவுலகையும்  ஆள கல்வி தேவை
என்று  தான் என்னை
மூன்று வயதில் சேர்த்தார்கள் 
பால பாடம்  படிக்க...

விலங்குகளையும் பறவைகளையும்
எனக்கு  அறிமுக படுத்தினாள்
என் ஆசிரியை ...

புது உலகில் சிறகடித்து பறக்க
தொடங்கினேன்  என் வயது
நண்பர்களுடன் ....

மொழி  தெரியா வயதில்
எந்த மொழி  பிடிக்கும்   என்றார்கள்
என் அன்னையை  தவிர  வேறொன்றும்
இல்லை  என்றேன் ...

வருடம்  ஓட ஓட  புது  புது  மொழிகள்
ஆங்கிலம் , அறிவியல் , புவியியல் , சமூக அறிவியல்
கணக்கு, எல்லாம் மன கணக்காய் ஆயின மனதில் ...

என் புறமும் கணக்கா தொடங்கின புத்தகங்கினால்

வருடங்கள்  உருண்டோனின ..
பள்ளி கல்வி போதாது என
கலோரியில் சேர்க்க பட்டேன்  பெற்றோரின்
விருப்ப பாடத்தில்...

கல்லூரி நட்பு எனக்கு கற்று கொடுக்க
தொடங்கியது வாழ்க்கையின் பல பாடங்களை .

பின், வேலைக்கான நேர்முக தேர்வு
என்னை போல் நூறு நண்பர்கள்  வரிசையில்

பல படிகள் ஏறி இறங்க கிடைத்தது
எனக்கான இருக்கை  ஆம்
கிடைத்தது என்னவளின் மனதில்

மீண்டும் காதல் கற்று கொடுத்தது
புதியதோர் அத்தியாயம்..

இந்த புத்தகம் கற்று கொடுத்ததும்
வாழ்க்கை  கற்று  கொடுத்ததும் இரு வேறு  ரகம்

புரியவில்லை எது சிறந்தது என்று

இருந்தும் .

இதோ காத்திருக்கிறேன்
என் பிள்ளையை பால பாடம் படிக்க
சேர்ப்பதற்காக விண்ணப்பித்து
வரிசையில் .....

----------------------------------------------

தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
"காமுறுவர் கற்றறிந் தார்."

"தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு
 கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்."
 

புரியாத புதிர் !

புரியாத புதிர் 

முதன் முதல் எனை பார்த்த போது
உன் உணர்ச்சியை நான் காணவில்லை

என்றும் எனை பற்றியே -உன்
சிந்தனை இருந்திருக்கக்கூடும்

எனக்காகவே நீ மறைத்திருப்பாய்
உன் துக்கங்களை என்னிடமிருந்து

நீ சோகமாய் இருந்தோ கண்ணீர்விட்டோ
நான் கண்டதில்லை...

நான் கேட்கும் எதையும் நீ
தர மறுத்ததில்லை இதுவரை....

என்னை பொறுத்தவரை -நீ
ஒரு புரியாத புதிர் தான்..

அந்த புதிருக்கான விடை காண
இதோ காத்திருக்கிறேன்

மருத்துவமனையின் முன்
அப்பா ஆகும் தருணத்திர்காக..

கனவு

கனவு 

நான்
உறங்கிய நேரம்
பார்த்து தான் வருகிறாய்
நீ !

என் 
எண்ணங்களின் 
பிரதிபலிப்பாய்
நீ !

பெரும்பாலும் 
வருகிறாய்
ஏனோ
வண்ணங்களில்லாமல்
நீ !!

நான்
உறங்க போகிறேன்
இன்றும் வருவாயோ
நீ !!

Wednesday, January 4, 2017

அட சொல்லுங்களேன்!?

                                               
           அட சொல்லுங்களேன்

இருபது வருடம் வளர்த்த தாயை 
இருபது நொடிகள் பார்த்த அவள் மறக்கடிக்கிறாள் 
இருபது நொடி அவளை பிரிந்தாலும்
இருபது யுகமாய் மாற்றியடிக்கிறாள் ..
காதல் பெரிதா இல்லை
தாயின்  அன்பு பெரியதா ?