Tuesday, January 31, 2017

பிரிவு

முதன் முதல் பார்த்தேன்
முதல் காதல் பூத்தது

இரு விழி பார்த்ததால்

இரு உள்ளம் சேர்ந்தது

மூன்றாம் நபர் வருகைக்காக

முதலிரவு அரங்கேறியது

நாளெல்லாம் உன் நினைவு போதும் என்று

நான்கு நாள் நினைத்திருப்பேன்

ஐந்தாம் நாள் ஏனோ உன்னை பற்றிய

ஐயம் தொற்றி கொண்டது

ஆறு படை முருகனே தப்பவில்லை

ஆறு நாள் ஆன நீயும் நானும் எம்மாத்திரம்

ஏழுலகை ஆளும் ஈசனே


ஏழாம் பொருத்தம் என் வாழ்க்கை ஆனதேனோ ?

எட்டு திக்கும் உன்னை போல் ஒருத்தி


எட்டாது எனக்கு என்றானே ?

ஓவியம் தான் என்றாலும்

உன் பிரிவு தாங்கலையே...

No comments: