Tuesday, January 31, 2017

கல்வி

மூவுலகையும்  ஆள கல்வி தேவை
என்று  தான் என்னை
மூன்று வயதில் சேர்த்தார்கள் 
பால பாடம்  படிக்க...

விலங்குகளையும் பறவைகளையும்
எனக்கு  அறிமுக படுத்தினாள்
என் ஆசிரியை ...

புது உலகில் சிறகடித்து பறக்க
தொடங்கினேன்  என் வயது
நண்பர்களுடன் ....

மொழி  தெரியா வயதில்
எந்த மொழி  பிடிக்கும்   என்றார்கள்
என் அன்னையை  தவிர  வேறொன்றும்
இல்லை  என்றேன் ...

வருடம்  ஓட ஓட  புது  புது  மொழிகள்
ஆங்கிலம் , அறிவியல் , புவியியல் , சமூக அறிவியல்
கணக்கு, எல்லாம் மன கணக்காய் ஆயின மனதில் ...

என் புறமும் கணக்கா தொடங்கின புத்தகங்கினால்

வருடங்கள்  உருண்டோனின ..
பள்ளி கல்வி போதாது என
கலோரியில் சேர்க்க பட்டேன்  பெற்றோரின்
விருப்ப பாடத்தில்...

கல்லூரி நட்பு எனக்கு கற்று கொடுக்க
தொடங்கியது வாழ்க்கையின் பல பாடங்களை .

பின், வேலைக்கான நேர்முக தேர்வு
என்னை போல் நூறு நண்பர்கள்  வரிசையில்

பல படிகள் ஏறி இறங்க கிடைத்தது
எனக்கான இருக்கை  ஆம்
கிடைத்தது என்னவளின் மனதில்

மீண்டும் காதல் கற்று கொடுத்தது
புதியதோர் அத்தியாயம்..

இந்த புத்தகம் கற்று கொடுத்ததும்
வாழ்க்கை  கற்று  கொடுத்ததும் இரு வேறு  ரகம்

புரியவில்லை எது சிறந்தது என்று

இருந்தும் .

இதோ காத்திருக்கிறேன்
என் பிள்ளையை பால பாடம் படிக்க
சேர்ப்பதற்காக விண்ணப்பித்து
வரிசையில் .....

----------------------------------------------

தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
"காமுறுவர் கற்றறிந் தார்."

"தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு
 கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்."
 

No comments: