விசித்திரமாய் தான் இருக்கிறது
ஐந்தறிவிற்கு உள்ள அன்பு
சில நேரம் ஆறறிவிற்கு
இல்லாததை காண்கையில்
நல்லவரென
சொல்லித்திரியும்
நீங்கள்
பொய் முகமூடியிட்டு
வழிநெடுக
அலைந்துகொண்டிருக்கிறீர்கள்
இதுவும் ஒரு பிம்பமாய்
ஒரு புகைப்படமாய்
ஒரு நிமிடத்தில்
உங்கள் மனதை கடந்து விடும்
நீங்கள் உதவுவீர்
என காத்திருந்தால்
ஆழியலை கூட
கரையை கடந்திருக்கும்
மற்றவர்களுக்காக
சிலுவையை
நீங்கள் சுமக்க வேண்டாம்
குறைந்தபட்சம்
மற்றவர்களின்
பாதைக்கு முள்ளாகமலாவது
இருக்க முயற்சியுங்கள்
மனம்
மரத்துப்போவதே
மனிதம் மரித்து போவதற்கு
தொடக்கம்
கண்மூடி
இருளென்று பயக்கும்
மனிதா,
கண் திறந்து பார்
உலகம் உனக்கானது
ஐந்தறிவிற்கு உள்ள அன்பு
சில நேரம் ஆறறிவிற்கு
இல்லாததை காண்கையில்
நல்லவரென
சொல்லித்திரியும்
நீங்கள்
பொய் முகமூடியிட்டு
வழிநெடுக
அலைந்துகொண்டிருக்கிறீர்கள்
இதுவும் ஒரு பிம்பமாய்
ஒரு புகைப்படமாய்
ஒரு நிமிடத்தில்
உங்கள் மனதை கடந்து விடும்
நீங்கள் உதவுவீர்
என காத்திருந்தால்
ஆழியலை கூட
கரையை கடந்திருக்கும்
மற்றவர்களுக்காக
சிலுவையை
நீங்கள் சுமக்க வேண்டாம்
குறைந்தபட்சம்
மற்றவர்களின்
பாதைக்கு முள்ளாகமலாவது
இருக்க முயற்சியுங்கள்
மனம்
மரத்துப்போவதே
மனிதம் மரித்து போவதற்கு
தொடக்கம்
கண்மூடி
இருளென்று பயக்கும்
மனிதா,
கண் திறந்து பார்
உலகம் உனக்கானது

No comments:
Post a Comment