Sunday, December 16, 2018

மனிதம்

விசித்திரமாய் தான் இருக்கிறது
ஐந்தறிவிற்கு உள்ள அன்பு
சில நேரம் ஆறறிவிற்கு
இல்லாததை காண்கையில்

நல்லவரென
சொல்லித்திரியும்
நீங்கள்
பொய் முகமூடியிட்டு
வழிநெடுக
அலைந்துகொண்டிருக்கிறீர்கள்

இதுவும் ஒரு பிம்பமாய்
ஒரு புகைப்படமாய்
ஒரு நிமிடத்தில்
உங்கள் மனதை கடந்து விடும்

நீங்கள் உதவுவீர்
என காத்திருந்தால்
ஆழியலை கூட
கரையை கடந்திருக்கும்

மற்றவர்களுக்காக
சிலுவையை
நீங்கள் சுமக்க வேண்டாம்
குறைந்தபட்சம்
மற்றவர்களின்
பாதைக்கு முள்ளாகமலாவது
இருக்க முயற்சியுங்கள்

மனம்
மரத்துப்போவதே
மனிதம் மரித்து போவதற்கு
தொடக்கம்

கண்மூடி
இருளென்று பயக்கும்
மனிதா,
கண் திறந்து பார்
உலகம் உனக்கானது

No comments: