அப்பட்டமான சுயநலத்தில்
உறவுகளை பகையென
கொள்ளும் இவ்வுலகில்
மற்ற ஜீவராசிகளை
ஜீவனுள்ளதாக
மனதில் கொள்ளவே
மனதில்லை
இம்மனிதனுக்கு
சிட்டுக்குருவிகளின்
கீச் கீச் சத்தத்தை
தன் கீச்சுகளின் மூலம்
பதிவிட்டு மனநிறைவு
கொள்கிறான்
தன் ஜனன காரணத்தையே
அறியா மானிடன்
பிற உயிரன்களின் பிறப்பின்
ரகசியம் எவ்வாறு
அறிவான் ?
நமது சுகவாசி
வாழ்வியலில்
மறுத்து மரித்து
போகிறது
அக்கறையும்
அன்பும்
உயிரில்லா
தொலைபேசியையும்
மடிக்கணினியையும்
கையிலும், மடியிலும்
தவழ விடும் நாம்
கொஞ்ச நேரம்
சிந்திப்போம்
உயிருள்ள ஜீவராசிகளை பற்றி
நாம் சிந்தும்
நீரும்,
உன்கையில் சிதறும்
சில பருக்கை சோறும்
போதும் அவை பசி ஆற
ஒற்றுமையாய் அமர்ந்து
உண்பதை காண்கயில்
உணர்த்துகிறது
இது படம் அல்ல
பாடமென ....

No comments:
Post a Comment