Tuesday, December 4, 2018

மழை !

அதோ கார்மேகங்கள்
வானத்தை சூழ்ந்துகொண்டிருக்கிறது
இதோ தும்பிகள் ரீங்காரம்
என் காதில் விழுகிறது

சில்லென்று மழை துளிகள்
மண்ணை நனைக்கிறது

மண்ணின் வாசனை
மெல்ல மேல் எழும்புகிறது

இடியின் சத்தம்
என்னை அதிர்ச்சியுடன்
ஆச்சரியபடுத்துகிறது

இதோ நனைய நான்
ஆசை கொண்டு
வெளியில் வருகிறேன்

கால் தடுக்கி
மழை நீரில் விழுகிறேன்
நண்பன் தோளில் தட்டி
எழுப்புகிறான்

விழித்தேன்
வறண்டபூமியில்
கனவிலேனும்
மழையை ரசிக்க விடாமல்
எழுப்பிய நண்பனை
திட்டியபடி

No comments: