Monday, April 2, 2018

நானிருக்கிறேன்

பெண்கள்
அழகாய் இருப்பதாலோ
ஆண்கள்
அமிலத்தை ஊற்ற நினைக்கிறார்கள்

தன்னை
நேசித்தவர்களை எல்லாம்
காதலிக்க வேண்டுமென்றால்
ஒரு பெண்ணுக்கு
எத்தனை ஆயுள் வேண்டிடுமோ

பூமியை தாய் என சொன்னதாலோ
அவளை தோண்டி அமிலம் எடுக்க
நினைக்கிறார்கள்

குடிக்க பணம் தராத தாயை
தலையில் கல்லிட்டு
கொள்ளும் இக்காலத்தில்
எதை செய்ய தயங்குவர்

செல்லமாய் கொஞ்சிடும்
பிராயத்தில் வஞ்சமாய்
நடந்திடும் சில மூடர் கூட்டங்கள்

புத்தக பை சுமையென நினைபோர்
மத்தியில் குடும்ப சுமையும்
சுமக்கும் பெண்கள்

இவையெல்லாம் கண்டதாலோ
நட்பென்னும் பூ எடுத்து
தென்றல்  காற்றென அருகில்
சென்றாலும்
அனல் காற்றென
ஆர்பரிக்கிறார்கள்

விடிந்தும் பூக்காத
செடி நீ
என் கண்ணீரில் தான்
பூப்பாய் எனில்
உனக்காய் அழவும்
நானிருக்கிறேன்

***********

No comments: