Tuesday, April 17, 2018

"செவிலி"

பெற்றெடுத்து
அன்பாய் பார்த்து கொள்பவள்
தாய்
நம்மை
பெற்றெடுத்தவளையும்
அன்பாய் பார்த்துக்கொள்பவள்
"செவிலி"

பிணி வந்து
அருகில் இருப்பவரே
முகம்  சுளிப்பினும்
முகம் மலர
பணிவிடை செய்பவள்
"செவிலி"

அறுவை சிகிச்சை ஆயினும்
ஆறாத நோயாயினும்
ஆறுதலுக்கு உடன் இருப்பவள்
"செவிலி"

பொறுமைக்கு
உவமை இவள்
போல் நான் கண்டதில்லை

நேரம் காலம் பாராது
தாய் போல நம் நலனில்
அக்கறை கொள்வதால்
உறவாய்
சகோதரி என்றே
அழைக்கிறோம்

பிணி கொள்ளும்
நேரத்தில்
நான் கண்ட தெய்வம்
"செவிலி "

No comments: