அன்று
என் எட்டு வயதில்
நண்பர்களுடன்
விளையாடிய விளையாட்டுக்கள்
தான் மனதில் அழியாத நினைவுகளாய்
இன்றுவரை இருக்கிறது
இன்று
எட்டு வயதில்
மதவெறி பிடித்த சில
நர மாமிச தின்னிகளுக்கு
இறையானாள் ஆசிஃபா
அதற்கு முன் நிர்பயா
தினமும் பெயர் மட்டும்
மாறி கொண்டு
இறைவனை படைத்தவன்
எவன்?
படைத்தவன் இறந்திருப்பான்
படைக்கபட்ட இறைவன்
உறங்கிருக்க கூடும்
அரசியலுக்காய்,பணத்துக்காய்
இறைவனுக்கு அரிதாரம் பூசி
இறைவனை கண்டு அஞ்ச வைத்து
வெற்றி பெற நினைக்கும் மூடர் கூட்டங்கள்
குழந்தையையும் பெண்களையும்
தெய்வத்திற்கு இணையாக
வணங்க சொல்லித்தந்த
மதங்கள் எங்கே?
கடவுள் இருக்கிறார் என்று
நம்பும் கோவிலிலேயே
இந்த ஈன செயல் நடந்தது
கொடூரத்தின் உச்சம்
விலங்குகளை காக்க சட்டம்
போட்ட நாம்
இந்த கயவர்களை தப்பிக்க
சட்டத்தின் ஓட்டையை
அடைத்து
இனி ஒரு விதி செய்வோம்
என் எட்டு வயதில்
நண்பர்களுடன்
விளையாடிய விளையாட்டுக்கள்
தான் மனதில் அழியாத நினைவுகளாய்
இன்றுவரை இருக்கிறது
இன்று
எட்டு வயதில்
மதவெறி பிடித்த சில
நர மாமிச தின்னிகளுக்கு
இறையானாள் ஆசிஃபா
அதற்கு முன் நிர்பயா
தினமும் பெயர் மட்டும்
மாறி கொண்டு
இறைவனை படைத்தவன்
எவன்?
படைத்தவன் இறந்திருப்பான்
படைக்கபட்ட இறைவன்
உறங்கிருக்க கூடும்
அரசியலுக்காய்,பணத்துக்காய்
இறைவனுக்கு அரிதாரம் பூசி
இறைவனை கண்டு அஞ்ச வைத்து
வெற்றி பெற நினைக்கும் மூடர் கூட்டங்கள்
குழந்தையையும் பெண்களையும்
தெய்வத்திற்கு இணையாக
வணங்க சொல்லித்தந்த
மதங்கள் எங்கே?
கடவுள் இருக்கிறார் என்று
நம்பும் கோவிலிலேயே
இந்த ஈன செயல் நடந்தது
கொடூரத்தின் உச்சம்
விலங்குகளை காக்க சட்டம்
போட்ட நாம்
இந்த கயவர்களை தப்பிக்க
சட்டத்தின் ஓட்டையை
அடைத்து
இனி ஒரு விதி செய்வோம்
No comments:
Post a Comment