என்றும் போல்
அன்றும் சூரியன்
கிழக்கே தான் உதித்தது
ஆனால் அன்று
என்றும் போல்
இல்லை எனக்கு
இனிமையாய் கேட்ட
கொலுசொலி என்னை
திரும்பி பார்க்க வைத்தது
கண்டது தேவதை என
நான் உணரும்முன்
கணக்கின்றி காதல்
விதைகளை வீசி சென்று விட்டாள்
திரும்ப உனை காண
கள்ளேறிய காளையாய் நான்
உன் அவிழ்த்துவிடப்பட்ட
கேசத்தில் அலைக்கழிந்து
சுற்றிக்கொண்டிருகிறேன்
என் எழுதுகோலும்
உன் பெயரை கவிதையாய்
இருண்டிருந்த வீதியில்
மின்மினி வெளிச்சம் போல
என் வாழ்வில் வந்தவள்
என் மூச்சுகாற்று தினம்
உன் பெயரையே
உச்சரித்து கொண்டிருக்கும்
சொல்லவியலா சோகங்கள்
மறக்க செய்யும் வித்தை
மழலைக்கு பின் இம்மண்ணில்
என்னவளின் சிரிப்புக்கு மட்டுமே உண்டு
உலகின் எந்த திசைக்கு
நீ பறந்தாலும் அன்பே
காற்றடைப்பட்ட பலூனாய்
உன்னுடன் கை கோர்த்து
பயணிக்க நானிருப்பேன்