Tuesday, January 23, 2018

புரிந்தது கொள்ளும் வரை

எழுதுகோல் எடுத்து
எழுத நினைத்த போது
யோசித்தேன்

எழுதுவது
ஓரிருவரி  கவிதையா ?
இல்லை
ஒருபக்க கவிதையா ?

எழுதுவது
படித்து புன்னகைக்கவா
இல்லை
பிறர் படித்து
அழுது கொண்டிருக்கவா

எழுதுவது

என் வாழ்க்கையையா
இல்லை
பிறர்
வாழ்க்கையையா

எழுதுவது
படிப்பவர்
பொருளறியவா?
இல்லை

வெறும் வார்த்தை
மட்டும் படித்து
கடந்து செல்லவா ?

புரியாதொன்றை
புரிந்தது கொள்ளும் வரை

இடைவெளி விட்டு
நிற்கிறது
என் எழுதுகோலும்
காகிதமும்

No comments: