என் காதல்
மலர் போல்
என்றேன்
மலர்ந்த மலர்
ஒருநாள் வாடிவிடும்
என அறியாமல்
என் காதலியை
மனம் கொத்தி பறவை
என்றேன்
தினம் என் மனதை
கொத்தி காய படுத்துவாள்
என அறியாமல்
அவளை மீன் என்றேன்
தண்ணீர் இன்றி
கரையில்
தத்தளிக்கும்
மீனாக நானாவேன்
என அறியாமல்
இதயத்தில்
ரோஜாவாய்
அவளை வைத்தேன்
ஏனோ
முட்களாய் மட்டும்
என்னை குத்துகிறாள்
மின் விசிறிகளின்
கூர்மூக்குகளும்
குத்தீட்டியாய்
என்னை சுற்றியே
சுழலுகிறது
பேரன்பிலே
நாம் சேர்ந்திட
வீண் வார்த்தைகளை
நான் தேட
கற்பனையில்
காதலி உன் கரம் பிடித்து
கனியாத காதலை எண்ணி
தினம் தினம் எழுத்துக்களில்
நாம் சங்கமிக்கும்
தருணம் மட்டும்
மிச்சம்
மலர் போல்
என்றேன்
மலர்ந்த மலர்
ஒருநாள் வாடிவிடும்
என அறியாமல்
என் காதலியை
மனம் கொத்தி பறவை
என்றேன்
தினம் என் மனதை
கொத்தி காய படுத்துவாள்
என அறியாமல்
அவளை மீன் என்றேன்
தண்ணீர் இன்றி
கரையில்
தத்தளிக்கும்
மீனாக நானாவேன்
என அறியாமல்
இதயத்தில்
ரோஜாவாய்
அவளை வைத்தேன்
ஏனோ
முட்களாய் மட்டும்
என்னை குத்துகிறாள்
மின் விசிறிகளின்
கூர்மூக்குகளும்
குத்தீட்டியாய்
என்னை சுற்றியே
சுழலுகிறது
பேரன்பிலே
நாம் சேர்ந்திட
வீண் வார்த்தைகளை
நான் தேட
கற்பனையில்
காதலி உன் கரம் பிடித்து
கனியாத காதலை எண்ணி
தினம் தினம் எழுத்துக்களில்
நாம் சங்கமிக்கும்
தருணம் மட்டும்
மிச்சம்
No comments:
Post a Comment