Friday, January 19, 2018

அங்கீகாரம்!

ஆண் பிள்ளை என நான் பிறந்தேன்
அப்படியே வளர்ந்தேன்

உடல்கூறின் மாற்றத்தால்
என் இனம் நான் மறந்தேன்

பெண்ணின் நடையும் உடையும்
என்னை ஈர்த்தது அதை பின்பற்ற என்
உடல் துடித்தது
உறவுகளில் விரிசல் வெடித்தது

ஆண் அல்ல நான், பெண் அல்ல நான்
இச்சமூகம் என்னை உதறியது

என்னுடன் பழகிய நண்பர்களும்
என்னை பெற்றவர்களும் என்னை
விசித்திரமாய் எண்ணினர்

வகுப்பறையில் தனியாய்
ஓரங்கட்டப்பட்டேன்
உறவுகளின் நிழல் கூட என் மீது பட தயங்க
கூனி குறுகி நின்றேன்

ஊடகத்தில் ரோஸும், பத்மினி பிரகாசும்  ,
லட்சிமிநாராயணனும், கல்கி சுப்ரமணியனும்
வென்றெடுத்த வெற்றி ஏன் எல்லாருக்கும்
எட்டா  கனியாகவே இருக்கிறது ?

அர்த்தநாரீஸ்வரர் என கோயில் சென்று
வணங்கும் மக்கள்
நேரில் எங்களை கண்டால் ஏனோ வெறுக்கிறார்கள்

வேண்டி வாங்கி வந்த வரம் அல்ல இது
வேதனை தினம் தின்னும் விதி இது

வழியில் இனிஒருமுறை எங்களை கண்டால்
பேசாவிட்டாலும்,
முகம் சுளிக்காமலேனும் இருந்தால்
அதுவே எங்களுக்கான உங்கள்
அங்கீகாரம் என கொள்வோமே

திருநங்கை எனை
உங்கள் தங்கை என
கொள்வீரோ?

No comments: