Monday, January 29, 2018

நானிருப்பேன்


என்றும் போல் 

அன்றும் சூரியன் 

கிழக்கே தான் உதித்தது 


ஆனால் அன்று 

என்றும் போல் 

இல்லை எனக்கு 


இனிமையாய் கேட்ட 

கொலுசொலி என்னை 

திரும்பி பார்க்க வைத்தது 


கண்டது தேவதை என 

நான் உணரும்முன் 

கணக்கின்றி காதல் 

விதைகளை வீசி சென்று விட்டாள் 


திரும்ப உனை  காண
கள்ளேறிய காளையாய் நான் 
உன் அவிழ்த்துவிடப்பட்ட 
கேசத்தில் அலைக்கழிந்து  
சுற்றிக்கொண்டிருகிறேன் 

என்
 எழுதுகோலும் 
உன் பெயரை கவிதையாய் 
எழுத காத்திருக்கிறது 

இருண்டிருந்த வீதியில் 

மின்மினி வெளிச்சம் போல 

என் வாழ்வில் வந்தவள்


என் மூச்சுகாற்று தினம் 

உன் பெயரையே

உச்சரித்து கொண்டிருக்கும் 


சொல்லவியலா சோகங்கள் 

மறக்க செய்யும் வித்தை 

மழலைக்கு பின் இம்மண்ணில் 

என்னவளின் சிரிப்புக்கு மட்டுமே உண்டு 


உலகின் எந்த திசைக்கு 

நீ பறந்தாலும் அன்பே 

காற்றடைப்பட்ட பலூனாய் 

உன்னுடன் கை கோர்த்து 

பயணிக்க நானிருப்பேன்  

No comments: